தேனி மாவட்ட ஆட்சித் தலைவருக்கு கிராம மக்கள் கோரிக்கை! 

தேனி மாவட்ட ஆட்சித் தலைவருக்கு கிராம மக்கள் கோரிக்கை! 

எம்.ஏ.கண்ணன்,

 மின்சாரம், சாலைவசதி போன்ற அடிப்படை வசதிகளை செய்துதரக்கோரி ஆட்சித் தலைவருக்கு கிராமமக்கள் கோரிக்கை வைத்திருக்கிறார்கள்.

  தேனி மாவட்டம், கடமலைக்குண்டு, மயிலாடும்பாறை ஒன்றியம், கண்டமனூர் பஞ்சாயத்துக்கு உட்பட்ட கிராமம் புது  ராமச்சந்திராபுரம் 250 வீடுகளையும் கொண்டு விவசாயத் தொழிலை செய்து வருகின்றனர்.

 பொதுமக்கள் கண்டமனூர் வருசநாடு மெயின் ரோட்டில் இருந்து கிராமத்திற்குள் 300 மீட்டர் தூரம் செல்லும் சாலை சேதமடைந்து உள்ளது.

  ஆனால் இங்கு இரவு நேரங்களில் பொதுமக்கள் டார்ச் லைட் வைத்து அடித்து செல்ல வேண்டிய நிலைமையில் உள்ளனர் மக்கள்.

 மெயின் ரோட்டில் இருந்து கிராமத்துக்குள் செல்லும் சாலை மின் விளக்குகள் இல்லை.

 கிராமத்தில் உள்ள சாக்கடைகளை சுத்தம் செய்யாமலும் சாக்கடை கட்டிடங்கள் இல்லாமல் தெருவில் சாக்கடை பெருத்து எடுத்து ஓடுகிறது.

 தெருக்களின் பொதுமக்கள் நடமாட முடியவில்லை. மின்விளக்குகள் மற்றும் சாக்கடைகள் அமைத்து சாலைகளை சரி செய்து தரும்படி தேனி மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களுக்கு கிராம மக்கள் கோரிக்கை வைத்திருக்கிறார்கள்.