ஆட்சியர் அலுவலக வளாகத்தில் வாக்கிங் போகக்கூடாது? ஆனால் அரசு ஊழியர்கள் மட்டும் போராட்டம் நடத்தலாமா! கேள்வியெழுப்பும் பொது மக்கள்!!

ஆட்சியர் அலுவலக வளாகத்தில் வாக்கிங் போகக்கூடாது? ஆனால் அரசு ஊழியர்கள் மட்டும் போராட்டம் நடத்தலாமா! கேள்வியெழுப்பும் பொது மக்கள்!!

கு.அசோக்,

  அரசு ஊழியர்கள் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் போராடலாமா என பொது மக்கள் கேள்வி எழுப்பியிருக்கிறார்கள்.

  வேலூர் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தமிழக ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் கவனஈர்ப்பு ஆர்பாட்டம் நடத்தினர்.

  வேலூர்மாவட்டம், வேலூர் சத்துவாச்சாரியில் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் 18 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கவண ஈர்ப்பு ஆர்பாட்டமானது மாவட்டத் தலைவர் வேலு தலைமையில் நடந்தது.

 இதில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் சேகா,¢ வருவாய்த்துறை ஊழியர் சங்க செயலாளர் செல்வகுமார், மக்கள் நல பணியாளர் சங்கம் சண்முகம் ஜோஷி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனா.¢ ஓய்வூதியர் சங்க மாநில பொதுசெயலாளர் ரவி இந்த ஆர்பாட்டத்தினை துவங்கி வைத்தார்.

  இதில் தமிழ்நாடு அரசு அனைத்து நிலை காலிப்பணியிடங்களை நிரப்பவும் அரசு பணியில் அவுட் சோர்சிங்க் முறையினை கைவிடவும் கிராம ஊராட்சிகளை மாநகராட்சி நகராட்சி பகுதிகளுடன் இணைக்கும் நடவடிக்கைகளை முற்றிலும் கைவிட வேண்டும் தமிழக முதல்வர் அறிவித்த வாக்குறுதியின்படி கடந்த கால வேலை நிறுத்த நாட்களை பணி வரன் முறைப்படுத்த வேண்டும் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் பிற துறை பணிகளில் அவர்களை ஈடுபடுத்துவதை கைவிடவும் உள்ளிட்ட 18 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்பாட்டம் நடந்தது.

  இதில் திரளானோர் பங்கேற்று கோஷங்களை எழுப்பினார்கள் அரசு கோரிக்கையை நிறைவேற்றவில்லை என்றால் பிப்ரவரி மாதம் சென்னையில் பெருந்திரள் ஆர்பாட்டம் நடத்தவுள்ளதாகவும் தெரிவித்தனர்.

  இந்த ஆர்பாட்டமானது ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. பொதுவாக அரசுக்கு எதிராகவோ அல்லது அரசின் கவனத்தை ஈர்க்கவோ போராட்டம் நடத்தும் அமைப்புகள், பொதுமக்கள் போன்றோர் அதற்கான இடத்தை தேர்வு செய்து போலிசாரிடம் அனுமதி பெற வேண்டும். ஆனால் அரசு அதிகாரிகள் அரசுக்கு எதிராக குரல் கொடுக்க அரசுக்கு சொந்தமான வளாகத்தையே பயன்படுத்துவது முறையற்றது.

  இனி வரும் காலங்களில் அரசு அலுவலர் மற்றும் ஊழியர் சங்கங்கள் ஆட்சியர் அலுவலகத்தில் போராட்டம் நடத்துவதை அனுமதிக்கக்கூடாது. வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் வாக்கிங் செல்ல தடை போட்ட நிர்வாகம் இதற்கும் தடை போட வேண்டும் என்கிறார்கள்.