வாக்கு எண்ணும் மையத்தில் அ.தி.மு.க.வினர் அராஜகம்! போலிசாருடன் தள்ளுமுல்லு!

டி.முகமது இர்பான்,
திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் ஊராட்சி ஒன்றிய எல்லைக்குட்பட்ட வாக்கு எண்ணிக்கை மையத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இன்று காலை திமுகவினர் அத்துமீறி நுழைந்து வாக்கு எண்ணிக்கை பெட்டியை மாற்றியதாக குற்றம்சாட்டி அதிமுகவினர் மற்றும் பாமகவினர் ரகளையில் ஈடுபட்டனர்.
வாக்கு எண்ணிக்கை மையத்தில் உள்ள நாற்காலிகள் பாதுகாப்புக்கு அமைக்கப்பட்டிருக்கும் வேலிகள் உள்ளிட்டவைகளை உடைத்து காவல்துறையுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அராஜகம் செய்தனர்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் மாதனூர் ஒன்றியம் மற்றும் ஆலங்காயம் ஒன்றியத்துக்கான 2ஆம் கட்டமாக ஊரக உள்ளாட்சி தேர்தல் நேற்றுநடைபெற்றது. ஆலங்காயம் ஒன்றியத்துக்கு 161 வாக்குசாவடிகள் அமைத்து அங்கு வாக்கு பதிவுகள் நடைபெற்றது.
மேற்படி வாக்குசாவடிகளின் பதிவான வாக்குபெட்டிகளை காவல்துறை பாதுகாப்புடன் வாணியம்பாடி அருகில் உள்ள ஆலங்காயம் அரசினர் மேல்நிலைபள்ளியில் வாக்கு எண்ணும் மையத்தில் வைக்கப்பட்டது.
இந்நிலையில் இன்று காலை வாக்குபெட்டியை 2அதிகாரிகள் கொண்டு செல்வதை போன்ற சிசிடிவி காட்சியில் வெளியாகியுள்ளது.
இதை பார்த்த அதிமுக சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார் வாக்கு எண்ணும் மையத்துக்கு வந்து அதிகாரிகளிடம் விசாரிக்கும் போது சரியான பதில் வரவில்லை என்று கூறியுள்ளார்.
இந்த தகவலை அறிந்த அதிமுக, பஜக மற்றும் இந்த தேர்தலில் சுயோட்சையாக போட்டியிட்ட வேட்பாளர்கள் வாக்கு எண்ணும் மைத்திற்க்கு வந்து காவல்துறையிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்கள்.
மற்றும் வாக்குபெட்டிகள் மாற்றப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு வைத்துள்ளார்கள். இதனால் அதிமுக, பஜக, பாமக மற்றும் சுயோட்சி வேட்பாளர்கள் அனைவரும் ஆலங்காயத்தில் இருந்து வாணியம்பாடி செல்லும் சாலையில் போராட்டம் செய்தனர். மேலும் தீயனைப்பான்கள் மற்றும் சேர்களை போட்டு உடைத்தார்கள். இதனால் அப்பகுதியில் பதற்றமான சூழல் ஏற்பட்டது.
இந்நிலையில், ஆலங்காயம் ஊராட்சி தேர்தல் அலுவலர் உமா மகேஸ்வரி மற்றும் ஆலங்காயம் தேர்தல் அலுவலர் சிவக்குமார் காவல் பணியில் இருந்த காவலர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர் என்று தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.