வாச்சாத்தி மேல்முறையீட்டு மனு டிஸ்மிஸ்! உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

எஸ்.முனுசாமி,
அப்போதைய தர்மபுரி மாவட்டம் வாச்சாத்தி வன்கொடுமை வழக்கு மிகவும் பரபரப்பானது. இந்த வழக்கில் கீழமை நீதிமன்றத்தில் அளித்த தீர்ப்பை கடந்த மாதம் உயர்நீதிமன்றம் உறுதிபடுத்தியது. இதனால் உயிருடன் இருந்த 214 குற்றவாளிகளுக்கும் தண்டனைகள் அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் வாச்சாத்தி வழக்கில் 2 குற்றவாளிகள் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது
வாச்சாத்தி வழக்கில் நான்கு ஐஎப்எஸ் அதிகாரிகள் உட்பட 12 பேருக்கு 10 ஆண்டுகள் சிறை மற்றும் ஐந்து பேருக்கு 7 ஆண்டுகள் சிறை மற்றவர்களுக்கு ஒன்று முதல் மூன்று ஆண்டு சிறை ஆகியவற்றை சென்னை உயர்நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. இந்த நிலையில் தண்டிக்கப்பட்ட முதன்மை குற்றவாளியான ஐ.எப்.எஸ். அதிகாரி நாதன் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.
இந்த மேல்முறையீட்டு மனு நேற்று விசாரணைக்கு வந்த நிலையில் நீதிபதி கே.விஸ்வநாதன் தலைமையிலான அமர்வு மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தது. மேலும் குற்றவாளிகள் 6 மாதத்திற்குள் சரணடைய வேண்டும் என உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டது.