அடேங்கப்பா.... சூலூர் பகுதியில் 735 கிலோ குட்கா!

ஜே.அருண் ஹென்றிக்ஸ்,
சூலூர் பகுதியில் 735 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல்.விற்பனைக்கு வைத்திருந்த 4 நபர்கள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.
இளைய சமுதாயத்தின் எதிர்காலத்திற்கு மாபெரும் அச்சுறுத்தலாக இருக்கும் போதைப்பொருட்களின் நடமாட்டத்தையும் பயன்பாட்டையும் முற்றிலும் ஒழிக்கும் பொருட்டு கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.பத்ரிநாராயணன்,இ.காப., அவர்கள் முனைப்புடன் செயல்பட்டு வருகிறார்.
அதன் அடிப்படையில் இன்று சூலூர் பகுதியில் மனித உயிருக்கு தீங்கு விளைவிக்கக் கூடிய குட்கா பொருட்களை விற்பனைக்கு வைத்திருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது.
அந்த தகவலின் அடிப்படையில், சூலூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடமான ரயில்வே ஃபீடர் ரோட்டிற்கு விரைந்து சென்று குட்கா பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த ராஜகோபால் மகன் மதன்ராஜ் (26), ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த புனமரம் மகன் மாதரம்(31), அரசூர் பகுதியை சேர்ந்த ராக்கியப்பன் மகன் சிவசாமி (48) மற்றும் சூலூர் பகுதியை நடராஜன் மகன் ராஜா (52) ஆகிய நபர்களை கைது செய்தனர்.
பின்னர், 735 கிலோ எடை கொண்ட குட்கா பொருட்கள் மற்றும் நான்கு சக்கர வாகனம்-1 ஆகியவற்றை பறிமுதல் செய்து மேற்படி நபர்களை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர்.