நாளை மாநிலம் முழுவதும் அன்னதானம்! விஜய் கட்சி அறிவிப்பு!

நாளை மாநிலம் முழுவதும் அன்னதானம்! விஜய் கட்சி அறிவிப்பு!

கே.ஏ.ஜெ.

நாளை உலக பட்டினி தினத்தை முன்னிட்டு மாநிலம் முழுவதும் அன்னதானம் வழங்கப்பட வேண்டும் என்று தமிழக வெற்றிக்கழகத்தின் பொதுச்செயலாளர் என்.ஆனந்த் கட்சியில் உள்ள அனைத்து அணியினருக்கும் தெரிவித்திருக்கிறார்.

இது குறித்து தெரிவித்திருப்பதாவது, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் தளபதி அவர்களின் அறிவுறுத்தலின்படி, பட்டினியில்லா உலகத்தை ஏற்படுத்த வேண்டும், அனைவருக்கும் உணவு கிடைத்திட வேண்டும் என்பதை வலியுறுத்தி, உலகப் பட்டினி தினமான. வருகிற 28.05.2024 அன்று தமிழ்நாடு முழுவதும் அனைத்துச் சட்டமன்ற தொகுதிகளிலும் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்குவதற்கான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும்.

 மாவட்ட, அணி, நகரம். ஒன்றியம். கிளை. மற்றும் சட்டமன்றத் தொகுதி நிர்வாகிகள் உள்ளிட்ட அனைவரும் உரிய தேர்தல் வழிகாட்டும் விதிமுறைகளைப் பின்பற்றிப் பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கி, மக்கள் நலப்பணியில் ஈடுபடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அந்த அறீக்கையில் கேட்டுக் கொள்ளப்பட்டிருக்கிறது.