இன்ஸ்பெக்டர் உட்பட மூவருக்கு தலா ஏழு ஆண்டு சிறை தண்டனை! லாக்கப் டெத்தா இல்லீகல் கஸ்டடியா?!
ஜி.கே.சேகரன்,
வேலூர் மாவட்டம், குடியாத்தம் அடுத்த மேல்பட்டி காவல் நிலையத்தில், கோபி (எ) கோபால் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு, விசாரணையின் போது காவல் நிலையத்திற்கு உள்ளேயே உயிரிழந்தார். இது தொடர்பாக காவல் ஆய்வாளர் மற்றும் சிறப்பு உதவி ஆய்வாளர் உள்ளிட்ட 3 பேருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த வழக்கின் விவரம் வருமாறு,
கடந்த 01.10.2013-ம் ஆண்டு குடியாத்தம் காமாட்சியம்மன் பேட்டையைச் சேர்ந்த ஆசிரியர் சுகுமார் என்பவர் மர்மமான முறையில் தட்டாங்குட்டை ஏரியில் இறந்து கிடந்தார்.
இது தொடர்பாக கிராம நிர்வாக அலுவலர் குடியாத்தம் கிராமிய காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வந்தது.
துவக்கத்தில் சந்தேக மரணம் என்று வழக்கு பதியப்பட்டது. பின்னர் கொலை வழக்காக ஆல்டர் செய்யப்பட்டது.
இந்த நிலையில் ஆசிரியர் சுகுமாரின் சவ ஊர்வலத்தின் போது செங்கொடி மற்றும் தரணி என்கின்ற இரண்டு நபர்களை சந்தேகத்தின் அடிப்படையில் போலீசார் கைது செய்கிறார்கள். பின்னர் அன்று இரவே கோபால் என்பவரையும் போலிசார் பிடித்தனர்.
அந்த வகையில் முன்னாள் இராணுவ வீரர் கோபால், ஆட்டோ ஓட்டுநர் செங்கொடி மற்றும் போலி மருத்துவர் தரணி ஆகியோரை போலிசார் கைது செய்து, அவர்கள் மூன்று பேரையும் குடியாத்தம் கிராமிய காவல் நிலையம் அருகில் உள்ள காவலர் குடியிருப்பில் வைத்து இரண்டு நாட்கள் விசாரிக்கின்றனர்.
அதன் பின்னர், குடியாத்தம் போலீஸ் குடியிருப்பில் இருந்து அந்த மூன்று பேரையும் மேல்பட்டி போலீஸ் ஸ்டேஷனுக்கு விடியாற்காலை அழைத்துச் சென்று செங்குடியையும் தரணியும் ஓரு லாக்கப்பிலும், கோபாலை தனி ஒரு லாக்கப்பிலும் அடைத்து வைத்தனர்.
அப்படியிருக்க மதியம் வேலையில செங்கொடிக்கு சிறுநீர் வருகிறது என்றதும் அவனை அழைத்துக்கொண்டு செல்லும்போது பக்கத்து அறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்த கோபாலை பார்த்து சார் அங்க பாருங்க கோபால் நாக்கு தள்ளி கீழே விழுந்து இருக்கிறார் என்று போலீசாரிடம் சொன்னார்.
பதறிப்போன போலிசார் கோபாலை உடனே ஆட்டோவில் தூக்கி போட்டுக் கொண்டு மேல் பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் டிரீட்மென்ட் கொடுக்க சென்றனர்.
. அங்கு இருந்த ஒரு பெண் செவிலியர் இங்க ஒன்றும் செய்ய முடியாது என்று மேல் சிகிச்சைக்காக கொண்டு செல்ல செல்கிறார்.
அப்பொழுது போலீசார் கோபாலுக்கு பல்ஸ் இருப்பதை போல ரெக்கார்ட் பண்ணி வாங்கிக் கொள்கின்றனர்.
அதன் பின்னர் கோபாலை குடியாத்தம் மருத்துவமனைக்கு கொண்டு செல்கின்றனர்.
அங்கு மாலை 5:45 மணிக்கு பிரசன்னா என்கின்ற டாக்டர் சோதனை செய்து பார்த்துவிட்டு ஏற்கனவே கோபால் இறந்து விட்டதாக தெரிவித்து ரெக்கார்ட் செய்து விட்டார்.
பின்னர் உடலை பிணவறையில் வைத்து விட்டு அதன் பிறகு அடுக்கம்பாறை ஜி எச் க்கு மாற்றுகின்றனர்.
இந்த நிலையில் கோபாலை போலீசார் தான் அடித்துக் கொன்றனர் என்று அவரது உறவினர்கள் பிரச்சனை செய்தனர்.
இதனால் குடியாத்தம் கிராமிய காவல் நிலைய இன்ஸ்பெக்டர் முரளிதரனை சஸ்பெண்ட் செய்துவிட்டு அந்த இடத்திற்கு பேரணாம்பட்டு காவல் நிலைய ஆய்வாளர் பழனியை பொறுப்பாக நியமிக்கின்றனர்.
பின்னர் தரணியும், செங்கொடியும் ஆசிரியர் சுகுமார் கொலை வழக்கில் ரிமாண்ட் செய்யப்படுகின்றனர்.
கோபால் தற்கொலை செய்து கொண்டதாக ரெக்கார்ட் பண்ணி விடுகின்றனர்.
இருந்தாலும் காவல் நிலையத்தில் இறந்தால் அது சிபிசிஐடி வழக்காக மாறிவிடும் என்பதால் இவ்வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு இன்ஸ்பெக்டர் விஜய் தலைமையில் விசாரணை செய்யப்பட்டு வந்தது.
அந்த விசாரணையில் தரணிக்கு காவல் நிலையத்தில் வைத்து அடித்ததில் கை உடைந்தது தெரியவந்தது. அதே நிலையில் அவர் ரினாண்ட் செய்யப்படுகிறார் சிறையில் வைத்து அவருக்கு ஒன்றரை மாதம் ட்ரீட்மென்ட் கொடுக்கப்படுகிறது.
மேலும் செங்கொடி என்பவர் ஆக்ஸிடென்ட்ல இறந்துவிட்டார்.
இந்நிலையில் சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணை செய்து கொண்டிருக்கின்ற தருவாயில் கோபால் லாக்கப்பில் வைத்து அடித்ததினால் இறக்கவில்லை அவருக்கு ஏற்கனவே இதய தசையில் கிழிச்சல் இருந்தது ஆகையால் தான் அவர் இறந்தார் என்று தெரிய வருகிறது. ஆகவே அது இயற்கை மரணம் என்று ரிப்போர்ட் வருகிறது.
ஆகவே சிபிசிஐடி போலிசார் அவர்கள் மீது கொலை வழக்கு என்று குற்ற பத்திரிகை தாக்கல் செய்யவில்லை.
மூன்று நாட்கள் இல்லீகல் கஸ்டடி வைத்து தாக்கினர் என்று தான் குற்றப்பத்திரிக்கையில் குறிப்பிட்டிருந்தனர்.
மேலும் தரணி மற்றும் செங்குடியும் தவறான சங்கதிகளுடன் ரிமாண்ட் செய்யப்பட்டார்கள் என்று சிபிசிஐடி போலீஸ் தெரிவித்திருந்தனர்.
இது ஒரு புறம் இருக்க இது ஏன் கொலை வழக்காக இருக்காது என்று நீதிமன்றம் கருதி கொலை கேஸாக ஆல்டர் செய்ய சொல்கிறார்கள்.
அதன் பின்னர் விசாரித்த போது இதுல கொலை வழக்கு வராது போலீஸ் அடித்ததினால் சாகவில்லை என்று ரிப்போர்ட் கொடுத்து விடுகின்றனர்.
அந்த வழக்கின் மீதான தீர்ப்பில் இன்ஸ்பெக்டர் முரளிதரனுக்கு ஏழு ஆண்டுகள் சிறை தண்டனையும், ஒரு லட்சத்து 70-ஆயிரம் ரூபாய் அபராதமும், சிறப்பு உதவி ஆய்வாளர் உமாசங்கருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டரையும் ஒரு லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் அபராதமும், பணி ஓய்வு பெற்ற சிறப்பு உதவி ஆய்வாளர் இன்பரசன் 7 ஆண்டுகள் சிறைதண்டனையும் ஒரு லட்சத்து 60 ஆயிரம் விதிக்கப்பட்டு தீர்ப்பு அளிக்கப்பட்டிருக்கிறது.
தற்போது ஆய்வாளர் முரளிதரன் வேலூர் மாவட்ட மதுவிலக்கு அமலாக்கத்துறை காவல் ஆய்வாளராக பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.இதனை அடுத்து ஆய்வாளர் முரளிதரன் மற்றும் இரண்டு சிறப்பு உதவி ஆய்வாளர்களும் சிறையில் அடைக்கப்பட்டனர்.
குறிப்பு:- இந்த வழக்கின் முக்கிய கருவான ஆசிரியர் சுகுமார் இறப்பு வழக்கானது கொலைவழக்கு அல்ல என்று தீர்ப்பானது. மேலும் செங்கொடி ஏற்கனவே விபத்தில் இறந்துவிட்டார்.
இடையே ஆசிரியர் கோபால் வழக்கு நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது.
ஏற்கனவே இந்த வழக்கு நடந்து கொண்டிருக்கும்போது செங்கொடி என்பவர் விபத்தில் இறந்துவிட்டார்.
இந்த சம்பவம் நடந்த போது குடியாத்தம் டிஎஸ்பி யாக சுந்தரம் என்பவர் இருந்தார். ஆனால் அவர் விடுப்பில் இருந்தார் என்பதால் தற்போது தப்பித்து இருக்கிறார்.
இருந்த போதும் சம்பவத்தின் போது டிஎஸ்பி சுந்தரம் சஸ்பெண்ட் செய்யப்பட்டார் என்பது நினைவு கூறும் தக்கதாகும்.