கலெக்டர் ஆபிசில் களவு போன முப்பது வாகனங்கள்! குறட்டைவிடும் சத்துவாச்சாரி போலிசார்!!

கலெக்டர் ஆபிசில் களவு போன முப்பது வாகனங்கள்! குறட்டைவிடும் சத்துவாச்சாரி போலிசார்!!

ஜி.கே.சேகரன்,

 வேலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் தொடர்ந்து இருசக்கர வாகனங்கள் காணாமல் போகிறதாம். காவல்துறை மெத்தனம் காட்டுவதாலும், கண்காணிப்பு கேமராக்களும் பழுதடைந்ததாலும்அதிகாரிகள் செய்வதறியாது திகைப்பொல் உள்ளனர்.

 வேலூர்மாவட்டம், வேலூ£,¢ சத்துவாச்சாரியில் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம் உள்ளது. இதற்கு இரண்டு நுழைவாயில்கள் உள்ளன, தினசரி ஆட்சியர் அலுவலகத்திற்கு ஆயிரக்கணக்கான  வாகனங்கள் தினசரி வந்து செல்கிறது.

 பொதுமக்கள் அரசு ஊழியர்கள் தாங்கள் கொண்டு வரும் வாகனங்களை வளாகத்தினுள் நிறுத்திவிட்டு சென்று திரும்பி வந்து பார்த்தால் இருசக்கர வாகனங்கள் காணாமல் போகிறது இதுவரையில் இந்த வளாகத்தில் 30-க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் சில மாதங்களில் திருடு போய்வுள்ளது.

 ஆனால் சத்துவாச்சாரி காவல் நிலையத்தினர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை பாதுகாப்பும் போடப்படவில்லை? ஆட்சியர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டு கேமராக்களும் பழுதாகியுள்ளது. இதனால் களவாணிகளுக்கு எடுத்த கையாகிவிட்டது.

  இந்நிலையில் நேற்று முன் தினம் துணை வட்டாட்சியர் மெர்லின் ஜோதிகாவின் வாகனம் திருடு போனது. இதே போன்று செய்தி மக்கள் தொடர்புத்துறையில் பணியாற்றும் ஊழியர் சுப்பிரமணி என்பவரின் விலை மதிப்பு மிக்க வாகனமும் திருடு போனது.

 தொடர்ந்து இருசக்கர வாகனங்கள் திருடு போவதால் அரசு ஊழியர்களும் பொதுமக்களும் இருசக்கர வாகனங்கள் ஆட்சியர் அலுவலகத்தில் நிறுத்தி அச்சப்படுகின்றனர்.

 இதற்கு மாவட்ட ஆட்சியர் தீர்வு காணவும் பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்த பொதுமக்களும், அரசு ஊழியர்களும் கோரிக்கை வைக்கின்றனர்.