என்னம்மா.... இப்படி பண்றிங்களேம்மா? சுடுகாட்டு இடத்தை மீட்டுத்தர கோரியவர்களை போராட தூண்டிய இன்ஸ்பெக்டர்!

ஜி.கே.சேகரன்,
நீங்களாச்சு, வட்டாட்சியர் ஆச்சு, எனக்கென்ன என நாட்றம்பள்ளி இன்ஸ்பெக்டர் மங்கையர்கரசியின் அலட்சியத்தால் , ஆர்பாட்டம்,தர்ணா போராட்டமாக மாறியதால் பெரும் பரபரப்பு.
திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த பச்சூர் பழையபேட்டை பகுதியில் சுமார் 350பழங்குடியினர் வகுப்பினை சேர்ந்த குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
இந்ந நிலையில் அந்த பகுதி மக்களுக்குக்காக அரசு கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு 52சென்ட் அளவில் சுடுகாட்டு இடம் ஒதுக்கி உள்ளது.
இதனை தனிநபர் ஒருவர் ஆக்கிரமிப்பு செய்து வருகிறார்.
இது குறித்து நாட்றம்பள்ளி வட்டாட்சியர் மற்றும் மாவட்ட ஆட்சியரிடம் பலமுறை அப்பகுதி பொதுமக்கள் சுடுகாட்டு இடத்தை மீட்டுத்தரக்கோரி மனு அளித்து உள்ளனர்.
புகார் மீது எந்தவொரு நடவடிக்கையும் எடுக்காததால் மார்க்சிஸ்ட் கட்சியினர் என்று கண்டன ஆர்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
அப்போது போலீசார் போராட்டத்தை கைவிட்டு வட்டாட்சியர் நேரில் வந்து பேச அழைத்ததாக கூறியதின் பேரில் போராட்டத்தில் ஈடுப்பட்டவர்கள் அங்கிருந்து வட்டாட்சியரை நேரில் சந்திக்க வந்தனர்.
அங்கு வந்து பார்த்த போது வட்டாட்சியர் வேற ஒரு நிகழ்ச்சிக்கு சென்று இருப்பதாக கூறிய வருவாய் துறையினரால் அதிர்ச்சி அடைந்த போராட்டக்காரர்கள், இன்ஸ்பெக்டர் மங்கையர்க்கரசி பொய் சொல்லியிருப்பதை தெரிந்துக்கொண்டனர்.
இதனால் ஆத்திரமுற்ற அவர்கள், வட்டாட்சியரை நேரில் பார்த்து விட்டு தான் செல்வோம் என அந்தஅலுவலகத்திலே தர்ணா போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
அப்போது அங்கிருந்த நாட்றம்பள்ளி இன்ஸ்பெக்டா மங்கையர்க்கரசி நீங்க போராட்டம் பண்ணுங்க...! எனக்கு என்ன என்று அலட்சியமாக வெளியே சென்றார்.
இதனை அறிந்து வந்த வட்டாட்சியர், நான் போலீசாரிடம் எதுவும் கூறவில்லை எனவும் இன்ஸ்பெக்டர் எங்கே என கேட்டபோது அங்கிருந்த போலீசார் காவல் நிலையம் சென்று விட்டார் என பதில் அளித்தனர்.
எனவே சுடுகாட்டு இடத்தை மீட்டு தர கோரிய ஆர்பாட்டம், நாட்றம்பள்ளி வட்டாட்சியர் அலுவலகத்தில் தர்ணா போராட்டமாக மாற்றிய இன்ஸ்பெக்டரால் பெரும் பரபரப்பு காணப்பட்டது.