மொட்டை மாடியில் வீசப்பட்டிருந்த பணக்கட்டுகள்!

மொட்டை மாடியில் வீசப்பட்டிருந்த பணக்கட்டுகள்!

 கு.அசோக்,

 துரைமுருகனின் சொந்த கிராமத்தில் நடராஜன் என்பவர வீட்டுமாடியிலிருந்து ரொக்கப்பணம் பறிமுதல் செய்யப்பட்டது. 

   வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் அடுத்த காங்ககுப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் நடராஜன். இவர் வீட்டில் பணம் பதுக்கி வைத்திருப்பதாக பறக்கும் படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

 அதன் அடிப்படையில் காவல்துறையினர் மற்றும் பறக்கும் படையினர் காங்குப்பம் கிராமத்துக்கு சென்று நடராஜன் வீட்டு கதவை தட்டினர். ஆனால் அரை மணி நேரம் கடந்த நிலையில் கதவை திறக்காததால் பக்கத்து வீட்டில் ஏறி மொட்டை மாடிக்கு காவல் துறையினர் இறங்கினர்.

  அங்கு  500 ரூபாய் பணக்கட்டுகள்  கிடைத்தது. இதனைத் தொடர்ந்து மொட்டை மாடியில் இருந்த படிக்கட்டு கதவை உடைத்து அதிரடியாக உள்ளே இறங்கினர் காவல்துறையினர்.  

 பின்னர் வீடு முழுவதும் சோதனை செய்ததில், மொட்டை மாடியில் கிடைத்த பணம் 2.5 லட்சம் மற்றும் பீரோவில் இருந்த பணம் உள்பட 7.50 லட்சம் பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். கிராம மக்களிடம் விசாரணை செய்ததில் நடராஜன் கிராமத்தில் உள்ள பொதுமக்களிடம் வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழில் செய்து வருவதாக சொன்னார்கள்.

 இந்நிலையில், வீட்டின் மொட்டை மாடியில் இருந்த 2.5 லட்சம் பணம் யாருடையது எப்படி மொட்டை மாடிக்கு எப்படி சென்றது என்று காவல்துறையினர் நடராஜன் இடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.