போலி சாதி சான்று மூலம் பதவி பிடித்தவர் சிக்கினார்!

ஜி.கே.சேகரன்,
வேலூர் அனைக்கட்டு ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட தோளப்பள்ளி கிராமத்தில் போலி சான்றிதழ் கொடுத்து வெற்றி பெற்ற ஊராட்சிமன்றதலைவர் மீது புகார் மாவட்ட ஆட்சியர் விசாரணைக்கு உத்தரவு
வேலூர்மாவட்டம்,அனைக்கட்டு ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்டது தோளப்பள்ளி கிராமம் இந்த கிராம ஊராட்சியின் தலைவர் பதவி தாழ்த்தப்பட்டோரில்( பொது) ஒதுக்கப்பட்டது.
இதன் அடிப்படையில் இந்த ஊராட்சியில் கல்பனா என்பவர் தாழ்த்தப்பட்ட வகுப்பை சார்ந்தவர் என சான்று கொடுத்து தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியருக்கு கல்பனா அளித்த சாதி சான்று போலியானது, அவர் தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவரல்ல என கல்பனாவை எதிர்த்து போட்டியிட்ட வேட்பாளர் ஒருவர் புகார் அளித்துள்ளார்.
இதுகுறித்து வேலூர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் தோளப்பள்ளி ஊராட்சி தலைவராக வெற்றி பெற்ற கல்பனாவின் சாதி சான்றிதழ் குறித்து வேலூர் மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை விழிக்கண் குழுவினர் விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளார்.
இதன் அடிபடையில் விசாரணை துவங்கியுள்ளது, ஊராட்சித் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள ஒருவர் போலி சான்றிதழ் வழங்கியுள்ள சம்பவம் அனைக்கட்டு பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
விசாரணை நடத்தி முடித்த பின்னர் தான் இந்த சாதி சான்றிதழ் குறித்து உண்மை நிலவரம் தெரியவரும் என்பது குறிப்பிடத்தக்கது.