26 ஆண்டுகளுக்குப் பின்னர் பாஜக வசமாக்கப்பட்ட தலைநகர் டெல்லி!

26 ஆண்டுகளுக்குப் பின்னர் பாஜக வசமாக்கப்பட்ட தலைநகர் டெல்லி!

 நரேஷ்.என்,

  தலைநகர் டெல்லியில் ஆம் ஆத்மி ஆட்சி நடைபெற்று வந்தது. டெல்லி முதல் அமைச்சராக இருந்த அரவிந்த் கெஜ்ரிவால் மீது மதுபான கொள்கை முறைகேடு குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்தார். இதனை தொடர்ந்து தனது முதல் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.

  இதனை தொடர்ந்து டெல்லி சட்டசபைக்கான காலம் முடிந்த நிலையில் தேர்தல் அறிவிக்கப்பட்டது. அதன்படி பிப்ரவரி 5ந் தேதி தேர்தல் நடத்தப்பட்டது. அந்த தேர்தல் முடிவுகள் இன்று அறிவிக்கப்பட்டு வருகிறது.

    தற்போதைய நிலவரப்படி பாஜக தான் தனிப்பெரும் தொகுதிகளில் வென்று முன்னிலையில் உள்ளது. ஆம் ஆத்மி படுதோல்வியை சந்திக்க உள்ளது என்றே கூறலாம்.

   இந்த நிலையில் டெல்லி சட்டசபை தேர்தலில் அரவிந்த் கெஜ்ரிவால் தோல்விக்கு இதுதான் காரணம் என காந்தியவாதி அண்ணா ஹசாரே கூறி உள்ளார். இதுதொடர்பாக அண்ணா ஹசாரே நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில், "தேர்தல் என்றால் ஒரு வேட்பாளரின் நடத்தை, எண்ணங்கள் சுத்தமானதாக இருக்க வேண்டும்.

   இதை நான் எப்போதும் கூறி வந்திருக்கிறேன். ஒருவரது வாழ்க்கை என்பது யாரும் குறை சொல்ல முடியாதபடி இருக்க வேண்டும். அதில் தியாகம் இருக்க வேண்டும். இந்த தகுதிகள் தான், ஒரு வாக்காளர் நம் மீது நம்பிக்கை வைப்பதற்கு அடிப்படையான ஒன்று.

  இதை நான் அரவிந்த் கெஜ்ரிவாலிடம் கூறி இருந்தேன். ஆனால் அதை கேட்கவில்லை. கடைசியில், மதுவில் தான் அவர் கவனம் செலுத்தினார். ஏன் இந்த பிரச்சினை எழுகிறது. அவர் பணத்தின் செல்வாக்குக்குள் மூழ்கிவிட்டார்" என்று அண்ணா ஹசாரே கூறினார்.

  ஆம் ஆத்மி கட்சி கடந்த 3 முறை டெல்லியில் ஆட்சி செய்து வந்தது. எனினும் கடந்த ஆட்சியில் மதுபான கொள்ளை முறைகேடு வழக்கில் குற்றப்பத்திரிக்கை வரை ஆம் ஆத்மி கட்சி பெயர் இடம் பெற்று இருந்தது. இது டெல்லி தேர்தலில் எதிரொலித்தது என்றும் கூற கூறலாம்.

பாஜக கூட்டணி - 48

ஆம் ஆத்மி - 22

காங்கிரஸ் - 0

(ஆட்சி அமைக்க தேவை 36 இடங்கள்)

   பிரதமர் மோடி, அமித் ஷா வாழ்த்து: "டெல்லி தேர்தல் வெற்றி வளர்ச்சிக்கு, நல் நிர்வாகத்துக்கு கிடைத்த வெற்றி. டெல்லியின் வளர்ச்சி, மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவோம்" என்று பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.

   டெல்லியில் பொய்களின் ஆட்சி முடிவுக்கு வந்துவிட்டது. இது ஆணவம் மற்றும் அராஜகத்தின் தோல்வி. இது 'மோடியின் உத்தரவாதம்' மற்றும் மோடியின் வளர்ச்சிப் பார்வை மீது டெல்லி மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையின் வெற்றியாகும். இந்த மகத்தான வெற்றிக்கு டெல்லி மக்களுக்கு மனமார்ந்த நன்றி. மோடியின் தலைமையின் கீழ் டெல்லி இப்போது ஒரு சிறந்த தலைநகராக மாறும்" என்று தெரிவித்துள்ளார்.

   தற்போதைய நிலவரப்படி ஆளும் ஆம் ஆத்மி கட்சி சார்பில் புதுடெல்லியில் போட்டியிட்ட கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதல்வருமான கெஜ்ரிவால், பாஜக வேட்பாளர் பர்வேஷ் சாஹிப் சிங்கிடம் தோல்வியுற்றார். அதேபோல் ஆம் ஆத்மி முக்கியத் தலைவர் மணீஷ் சிசோடியா ஆகியோரும் தோல்வியைத் தழுவினர். டெல்லி முதல்வராக பாஜக பர்வேஷ் சாஹிப் சிங்கையே தேர்வு செய்யும் என்று கூறப்படுகிறது.

 மணீஷ் சிசோடியா ஜங்புரா தொகுதியில் 600 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார்.

 ஆக 26 ஆண்டுகளுக்குப் பின்னா  டெல்லியில் அமைகிறது பாஜக ஆட்சி.