தொழிலாளர்களின் வயிற்றில் அடிக்கு ஷூ கம்பெனிகள்! கட்டிங் பேசும் அலுவலர்கள்!!

ஜி.கே.சேகரன்,
பேர்ணாம்பட்டில் காலணி தயாரிக்கும் தொழிற்சாலையில் போனஸ் வழங்காததால் தொழிலாளர்கள் 4 ஆவது நாளாக உள்ளிருப்பு போராட்டம்.
வேலூர் மாவட்டம்,பேர்ணாம்பட்டில் ஆல்பா ஷூஸ் என்ற காலணிதயாரிக்கும் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது இந்த தொழிற்சலையில் 250க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வருகிறார்கள் இவர்களுக்கு இந்த தொழிற்சாலையில் போனஸ் வழங்கப்படவில்லை.
இதனால் பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் நிர்வாகத்திடம் பலமுறை கேட்டும் போனஸ் வழங்காததால் கடந்த 4 ஆவது நாளாக இன்றும் தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இன்று நடந்த போராட்டத்தில் போனஸ் வழங்க வேண்டுமென கோரினர்.
இதனால் தொழிற்சாலை பணிகள் முடங்கியது இன்று காவல்துறை மற்றும் வருவாய்துறை பேச்சுவார்த்தை நடத்தினர்கள் நிர்வாகத்துடன் பேசி சுமுக தீர்வு காண்பதாக கூறினார்கள் இருப்பினும் போராட்டம் தொடர்கிறது.
இவற்றையெல்லாம் கவனித்து நடவடிக்கை எடுக்க வேண்டிய தொழிலாளர் நல அலுவலர்கள் நிர்வாகத்திடம் கட்டிங்