274 பல்துறை அரசு அலுவலர்கள், காவலர்கள், மருத்துவர்களுக்கு சான்றுகள்! திருப்பத்தூர் கலெக்டர் பாஸ்கர பாண்டியன் வழங்கினார்!

274 பல்துறை அரசு அலுவலர்கள், காவலர்கள், மருத்துவர்களுக்கு சான்றுகள்! திருப்பத்தூர் கலெக்டர் பாஸ்கர பாண்டியன் வழங்கினார்!

 ஆர்.ரமேஷ், 

 திருப்பத்தூர் பாச்சல் ஆயுதப்படை காவலர் மைதானத்தில் நடைப்பெற்ற 2023-ஆம் ஆண்டிற்கான  சுதந்திரத் திருநாள் விழாவினில் மாவட்ட ஆட்சித்தலைவர்திரு.தெ.பாஸ்கரபாண்டியன்.இ.ஆ.ப., அவர்கள் தேசிய கொடியை ஏற்றி வைத்து, பல்வேறு அரசு துறைகளின் சார்பில் 239 பயனாளிகளுக்கு ரூ.1.81 கோடி  மதிப்பிளான நலத்திட்ட்டங்களை வழங்கினார்.

   திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை ஒன்றியம், பாச்சல் கிராமத்தில் உள்ள ஆயுதபடை காவலர் பயிற்சி மைதானத்தில் நடைப்பெற்ற 2023-ஆம் ஆண்டிற்கான  சுதந்திரத்திருநாள் விழாவினில் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.தெ.பாஸ்கரபாண்டியன்.இ.ஆ.ப., அவர்கள் இன்று 15.08.2023 தேசிய கொடியை ஏற்றிவைத்து மரியாதை செய்து, காவலர் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்கள்.           

  தொடர்ந்து சிறந்த காவலர்களுக்கான நற்சான்றிதழ்களை வழங்கி, தொடர்ந்து சுதந்திரப் போராட்ட தியாகிகளின் வாரிசுதாரர்களுக்கு கதர் சால்வை அணிவித்து நினைவு பரிசுகளை வழங்கி கௌரவித்தார்கள், தொடர்ந்து அரசு மற்றும் தனியார் பள்ளியில் பயிலும் மாணவ மாணவர்களின் பல்வேறு பள்ளிகளின் சார்பாக நடைபெற்ற கலை நிகழ்ச்சிகள் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.தெ.பாஸ்கரபாண்டியன்.இ.ஆ.ப., அவர்கள் பார்வையிட்டார்.

  தொடர்ந்து திருப்பத்தூர் மாவட்டத்தில் நன்முறையில் பணியாற்றிய வருவாய்த்துறை, காவல் துறைஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை உள்ளிட்ட 274 பல்துறை அரசு அலுவலர்கள், காவலர்கள், மருத்துவர்கள் மற்றும் பணியாளர்களுக்கு பாராட்டுச் சான்றிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.தெ.பாஸ்கரபாண்டியன்.இ.ஆ.ப., அவர்கள் வழங்கி பாராட்டினார்கள்.

  பின்னர் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையின் சார்பாக 10  பயனாளிகளுக்கு ரூ.17.30 இலட்சம் மதிப்பிலான இலவச வீட்டு மனை பட்டாவும், 94 பயனாளிகளுக்கு ரூ.5.50 இலட்சம் மதிப்பிலான பழங்குடியினர் சாதி சான்று, ஆதரவற்ற விதவை சான்றும் மற்றும்; சாலை விபத்து நிவாரணம், சமூக பாதுகாப்புத்திட்டத்தின் மூலம் 37 பயனாளிகளுக்கு ரூ.5.49 இலட்சம் மதிப்பீட்டில் கல்வி உதவி தொகை மற்றும் இயற்கை மரணம் உதவி தொகை, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் 02 பயனாளிகளுக்கு ரூ.11,031/ மதிப்பிலான இலவச தையல் இயந்திரம் வழங்கினார்.

  மற்றும் இலவச சலவைப்பெட்டியும், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் மூலம் 01 பயனாளிக்கு ரூ.6,990/மதிப்பிலான  இலவச தையல் இயந்திரமும்பழங்குடியினர் நலத்துறையின் மூலம் 01 பயனாளிக்கு ரூ.4,650 மதிப்பிலான தையல்  இயந்திரமும், ஊரக வளர்ச்சித் துறையின் மூலம் 04 பயனாளிகளுக்கு ரூ.7.80 இலட்சம்  மதிப்பிலான விவசாய நிலத்தில் மண் வரப்பு  கட்டுதலும், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மூலம் 03 மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ.43 இலட்சம் மதிப்பீட்டில் மகளிர் சுய உதவி குழு வங்கிக்கடனும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலம் 03 பயனாளிகளுக்கு ரூ.2.50 இலட்சம் மதிப்பிலான இணைப்பு சக்கரம் பொருந்தப்பட்ட பெட்ரோல் வாகனமும் வழங்கப்பட்டது.

  வேளாண்மை துறையின் மூலம் 16 பயனாளிகளுக்கு ரூ.3.21 இலட்சம் மதிப்பிலான என்.ஏ.டி.பி நடவு முறை துவரை திட்டம் மற்றும் ஒருங்கிணைந்த பண்ணையமும், வேளாண்மை பொறியியல் துறையின் மூலம் 02 பயனாளிகளுக்கு ரூ.6.80 இலட்சம்  மதிப்பிலான உழவு இயந்திரம் டிராக்டர் மற்றும் பவர் டிரில்லரும், தோட்டக்கலை மற்றும் மலைபயிர்கள் துறை மூலம் 61 பயனாளிகளுக்கு ரூ.89.58 இலட்சம் மதிப்பிலான பிரதம மந்திரி நுண்ணீர் பாசன திட்டம் மற்றும் தேசிய தோட்டக்கலை இயக்கம், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை மூலம் 05 பயனாளிகளுக்கு ரூ.2,500 மதிப்பிலான கண்ணாடி வழங்குதல் என மொத்தம் 239 பயனாளிகளுக்கு ரூ.1 கோடியே 81 இலட்சத்து 44 ஆயிரத்து 952 ஃ- மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவா திரு.தெ.பாஸ்கரபாண்டியன்.இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார்கள்.

  இந்நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ஆல்பர்ட் ஜான்.,இ.கா.ப., மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி.இ.வளர்மதி, திட்ட இயக்குநர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திரு.செல்வராசு, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) பொறுப்பு திரு.முத்தையன், தனித்துணை ஆட்சியர் (ச.பா.தி) திரு.ண்பெலிக்ஸ் ராஜா, உதவி ஆணையர் கலால் திரு.ஜோதிவேல், வருவாய் கோட்டாட்சியர்கள் திருமதி.பானு, (திருப்பத்தூர்), செல்வி.பிரேமலதா (வாணியம்பாடி), முதன்மை கல்வி அலுவலர் திரு.க.முனிசுப்ராயன், வேளாண்மை இணை இயக்குனர் (பொ)திரு.இராமச்சந்திரன், தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் திருமதி.தீபா, உதவி இயக்குநர் ஊராட்சிகள் திருமதி.விஜயகுமாரி, பல்வேறு துறை அரசு அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் பலர் கலந்துக்கொண்டனர்.

செய்தி வெளியீடு: செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம் திருப்பத்தூர்;.