கரும்பு பத்தாது தேங்காயும் தாங்க அய்யா!

க.பாலகுரு,
உழவர் திருநாளுக்கு பொங்கல் சிறப்பு தொகுப்பு திட்டத்தில் செங்கரும்பு வழங்குவதற்கு உத்தரவிட்ட தமிழக முதல்வருக்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் பொதுச்செயலாளர் பி.எஸ் .மாசிலாமணி நன்றி சொன்னார்
உழவர் திருநாளன்று பொங்கல் பரிசு தொகுப்புடன் வழக்கமாக செங்கரும்பும் வழங்கி வந்த நிலையில் கரும்பு சாகுபடி செய்யும்விவசாயிகளுக்கு கட்டுப்படியான விலை கிடைப்பதில் நல்ல பலன் இருந்தது.
ஆகவே நடப்பு ஆண்டும் கூடுதலான பரப்பளவில் கரும்பு சாகுபடியை விவசாயிகள் செய்திருந்த நிலையில் தமிழக அரசு கரும்பை தவிர்த்து அறிவித்த செய்தி விவசாயிகளை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.
ஆகவே விவசாயிகள் தமிழக அரசுபரிசீலனை செய்ய வேண்டும் என்று போராடினர். தமிழ்நாடு விவசாயிகள் சங்கமும் தமிழக முதல்வர் அவர்களுக்கு கோரிக்கையை அனுப்பி இருந்த நிலையில், எங்களின் கோரிக்கை ஏற்று தமிழக முதல்வர் அவர்கள் பொங்கல் பரிசு தொகுப்புடன்செங்கரும்பையும் சேர்த்துவழங்குவதாக அறிவித்ததை பாராட்டுகிறோம்.
தேங்காய் சேர்த்து வழங்கிட வேண்டும் என்ற எங்கள் கோரிக்கை விடப்பட்டிருப்பதை மறுபடி ஆய்வு செய்திட வேண்டுகிறோம் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் பொதுச்செயலாளர் பி.எஸ் .மாசிலாமணி கோரினார்.