வேளாண் மையங்களை மாணவர்கள் பார்வையிட வேண்டும்!சொல்கிறார் கலெக்டர்!

வேளாண் மையங்களை மாணவர்கள் பார்வையிட வேண்டும்!சொல்கிறார் கலெக்டர்!

கு.அசோக்,

   தமிழ்நாடு சுற்றுலா கூட்டமைப்பின் சார்பாக வேளாண் சுற்றுலா அறிமுக கூட்டம் நடைபெற்றது.

 இயற்கை வேணாண் விளை பொருள்களின் கண்காட்சி மற்றும் விற்பனையானது வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் வட்டம் களாம்பட்டு கிராமத்தில் அமைந்துள்ள அறிவுத்தோட்டம் வளாகத்தில் நடைபெற்றது.

  இந்த கூட்டத்திற்கு கூட்டமைப்பின் தலைவர் இறையழகன் தலைமை தாங்கினார்.

  வேலூர் மாவட்ட ஆட்சியர் வே.இரா.சுப்புலட்சுமி அவர்கள் தொடக்கி வைத்து பேசினார்.

  அப்போது அவர் கூறியதாவது, இந்த வேளாண் சுற்றுலா கூட்டமைப்பின் நிகழ்ச்சியில் பங்கேற்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். இயற்கை சூழலில் இந்த நிகழ்வு நடைபெறுகிறது.

 விவசாயிகள் தங்கள் குறைகளை போக்குவதற்காக மாவட்ட ஆட்சியர் தலைமையிலே குழுக்கள அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.

 விவசாயிகள் தங்கள் குறைகளை சொல்லுங்கள் நிவர்த்தி செய்ய தயாராக இருக்கிறோம். இதுபோன்ற இயற்கை வேளாண் மையங்களை மாணவர்கள் பார்வையிட வேண்டும். இதிலிருந்து பல செய்திகளை அவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்று சொன்னார்.