நூற்றாண்டை கடந்த கிறிஸ்தவ பள்ளிக்கு உதவிய சக்தி அம்மா!

நூற்றாண்டை கடந்த கிறிஸ்தவ பள்ளிக்கு உதவிய சக்தி அம்மா!

 ஜெயசீலன்,

வேலூரில் நூற்றாண்டைக் கடந்த கிறிஸ்தவ பள்ளிக்கூடம் ஒன்று உள்ளது. இந்த பள்ளியின் வளர்ச்சிக்காக பல்வேறு வகையில் நிதி திரட்டப்பட்டு வருகிறது?

 இந்நிலையில் அந்த பள்ளிக்கூடத்தில் ஏற்பாடு செய்துள்ள நிகழ்ச்சி ஒன்றுக்காக அரியூர் மலைக்கோடி தங்கக்கோவிலுக்கு மேற்படி பள்ளிக்கூடத்தின் தலைமை ஆசிரியர் சகிதமாக சென்றனர்.

 பின்னர் தங்க கோவிலின் ஸ்தாபகர் சக்தி அம்மாவிடம் தலைமை ஆசிரியர் குழு பள்ளிக்கூட நிகழ்ச்சியைப் பற்றி எடுத்துரைத்தனர். (சக்தி அம்மா இந்த பள்ளிக்கூடத்தில் தான் படித்தார்).

 அனைத்தையும் கேட்டுக் கொண்ட சக்தி அம்மா அனைத்து பிள்ளைகளுக்கும் மதிய உணவு அளிப்பதாக தெரிவித்தார்.

 இந்த காட்சிகள் சமூக ஊடகங்களில் வெளியானதை தொடர்ந்து சில விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.

 அது குறித்து தலைமையாசிரியர் எபிநேசர் கருத்து தெரிவிக்கையில், அறிவு இல்லாதவர்கள் தான் இப்படி பேசுவார்கள்.

 நாங்கள் உலகம் பூராவும் இந்த தகவலை தெரிவித்துள்ளோம், ஒருத்தரும் ஐந்து பைசா பத்து பைசா தரவில்லை. திருச்சபைகளில் அறிவிப்பு செய்துள்ளோம். சென்டரல் சர்ச்சில் 5 லட்சம் கொடுத்தார்கள். சக்தி அம்மா பத்து லட்சம் கொடுப்பதாக சொன்னாங்க என்று ரொம்பவே ஆவேசப்பட்ட அவர் முன்னாள் மாணவர்கள் அனைவருக்குமே தகவல் தெரியும் என்று சொன்னார்.

 நாம் விசாரித்த வகையில் முன்னாள் மாணவர்கள் எவருக்குமே இந்த நிகழ்வைப் பற்றி முழுமையாக தகவல் தெரிவிக்கவில்லை. அப்படி தெரிவிக்கப்பட்டிருந்தால் அனைத்து செலவீனங்களையும் அவர்களே ஏற்றுக் கொண்டிருப்பார்கள் என்று தெரிவித்தனர். மேலும் இது போல பலமுறை செய்யப்பட்டு வருகிறது.

 இந்த பள்ளிக்கூடத்தின் முக்கிய பொறுப்பாளர்கள், வசூல் பணத்தின் கணக்கு வழக்கை சரி பார்ப்பது சிறப்பாக இருக்கும் என்கிறார்கள்.