குரங்குகளின் தாகத்தை போக்குமா வனத்துறை! ஏலகிரி பரிதாபம்!

ஜி.கே.சேகரன்,
கோடைகாலம் ஆகட்டும், ஏன் மழைக்காலம் என்றாலும் கூட ஏலகிரி மலையில் வன விலங்குகளுக்கு தண்ணீர் கிடைப்பது இல்லை? இதனால் வறண்ட தொட்டியை தேடி குரங்கு குட்டிகளுடன் பரிதவித்துக் கொண்டிருக்கின்றன.
திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அடுத்த, ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் ஏலகிரி மலை, சுற்றுலா தலமாக விளங்கி வருகிறது, இந்த சுற்றுலா தளத்திற்கு வெளி மாநிலம் மற்றும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுற்றுலா வாசிகள் வந்து இயற்கையை கண்டு கழித்துசெல்வது உண்டு,
மேலும், மலைப்பகுதியில் பல்வேறு உயிரின வன விலங்குகள் வாழ்ந்து வருகிறது,
இந்நிலையில் மலையேறும் பகுதிகளில் வனத்துறையின் மூலம் விலங்குகளுக்காக தண்ணீர் தொட்டி ஆங்காங்கே அமைக்கப்பட்டு உள்ளது
அவை பெயரளவுக்கு மட்டுமே தண்ணிர் தொட்டி ஆனால் அவற்றில் சொட்டு தண்ணீர் கூட காணமுடிவதில்லை.
இதனால் குடிதண்ணீருக்காக குரங்குகள் தனது குட்டிகளுடன் தண்ணீர் தொட்டியை தேடி வந்து ஏமாந்து செல்கின்றன.
தாகத்தால் அந்த ஜீவன்கள் தவிக்கும் தவிப்பை பார்ப்போர் நெஞ்சை பரிதவிக்க வைக்கின்றது,
மனசாட்சி கொண்ட வனத்துறையினர் இதை கொஞ்சம் கவனத்தில் கொள்ள வேண்டும்.