மருந்து மாத்திரை கொடுத்தாங்களா? அரசு மருத்துவமனையில் ஆட்சியர் சுப்பு லெட்சுமி திடீர் ஆய்வு!
ஜி.கே.சேகரன்,
வேலூர் மாவட்டம், பேர்ணாம்பட்டு அரசு மருத்துவமனையில் மாவட்ட கலெக்டர் வே.இரா.சுப்புலெட்சுமி திடீர் ஆய்வு நடத்தினார். சிகிச்சைகள் குறித்து நோயாளிகளிடம் கேட்டு அறிந்தார்.
பேர்ணாம்பட்டு அரசு மருத்துவமனைக்கு வருகை தந்த மாவட்ட ஆட்சியர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளிடம் மருத்துவமனையில் அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்தும் மற்றும் மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர்கள் மருந்தகத்தில் உள்ள மருந்துகளின் இருப்பு, அரசு மருத்துவமனை மருந்து இருப்பு அறையை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர் எருக்கம்பட்டு சாலையில் உள்ள குப்பையில் இருந்து இயற்கை உரம் தயாரிக்கும் மையம், அண்ணாநகர் பகுதியில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் சாலை அமைக்கும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
மேலும் பழைய அரசு மருத்துவமனை கட்டிடத்தை நீதிமன்ற இடமாக மாற்றுவதற்கு அதிகாரிகளிடம் கருத்துக்களை கேட்டு அறிந்தார் .
பின்னர் நகராட்சியில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து நகராட்சி அலுவலர்களிடம் கேட்டறிந்தார். இந்த ஆய்வின்போது வருவாய் கோட்டாட்சியர் சுபலட்சுமி பேர்ணாம்பட்டு தாசில்தார் வடிவேல் நகராட்சி ஆணையாளர் வேலவன் உட்பட அதிகாரிகள் உடன் இருந்தனர்.