5,25,000 ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட சுகாதார வளாகம் வேஸ்ட்!

ஜி.கே.சேகரன்,
வாணியம்பாடி அருகே 3 ஆண்டுகளாக பயன்பாட்டிற்கு வராமல் மூடிக்கிடக்கும் சமுதாய சுகாதார வளாகம் பயன்பாட்டிற்கு கொண்டுவர மக்கள் கோரிக்கை.
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அருகே, ஜோலார்பேட்டை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட செட்டியப்பனூர் ஊராட்சி இந்திரா நகர் பகுதியில் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த 2020-2021 ஆம் ஆண்டு 5,25,000 ரூபாய் மதிப்பீட்டில் ஆண்கள் மற்றும் பெண்கள் சமுதாய சுகாதார வளாகம் கட்டப்பட்டுள்ளது. ஆனால் அந்த கட்டிடம் கட்டப்பட்ட நாட்கள் முதல் திறக்கப்படாமல் உள்ளது .இதனால் பொதுமக்கள் இயற்கை உபாதை கழிக்க முடியாமல் மிகவும் சிரமப்படுகின்றனர்.
திறந்தவெளியில் இயற்கை உபாதை கழிப்பதால் நோய் பரவும் நிலை ஏற்பட்டுள்ளது. பழுதடைந்து பராமரிப்பு இல்லாமல் இருக்கும் சமுதாய சுகாதார வளாகத்தை உடனடியாக பராமரித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.
இது குறித்து செட்டியப்பனூர் ஊராட்சி மன்றச் செயலாளர் கணபதியிடம் கேட்டதற்கு ஓரிரு நாட்களில் தூய்மைப்படுத்தி உடனடியாக பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என உறுதியளித்தார்.