சார்.... 38 முறை பேசியும் சுமூக தீர்வில்லை! அமைச்சர் துரைமுருகன் பேட்டி!

சார்.... 38 முறை பேசியும் சுமூக தீர்வில்லை! அமைச்சர் துரைமுருகன் பேட்டி!

ஜி.கே.சேகரன்,

   மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடக துணை முதல்வரிடம் தமிழகமும் நீங்களும் பேச்சுவார்த்தை நடத்தி தீர்த்துகொள்ளுங்கள் என்பது தற்கொலைக்கு சமம் - 38 முறை பேசியும் சுமூக தீர்வில்லை-தமிழக  நீர் வளத்துறை அமைச்சர்துரைமுருகன் சேனூரில் பேட்டி.

 வேலூர் ¢மாவட்டம், காட்பாடியில் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஊராட்சி தலைவர்களுடனான கலந்தாய்வு கூட்டம் அமைச்சர் துரைமுருகன் தலைமையில் நடந்தது.  இதில் ஊராட்சி தலைவர்கள் உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

 இதன் பின்னர் கரசமங்கலம் என்ற இடத்தில் ரயில்வே கேட்டில் கடவு பாதையில் மேம்பாலம் அமைப்பதற்காக ரூ.29.14 கோடி மதிப்பீட்டில் புதிய ரயில்வே மேம்பாலம் அமைப்பதற்கான அடிக்கல்லை அமைச்சர் துரைமுருகன் அடிக்கல் நாட்டினார்.

 இதில் மாவட்ட ஆட்சியர் வே.இரா.சுப்பு லெட்சுமி, குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் அமுலு, ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் வேல்முருகன்,துணை மேயர் சுனில் உள்ளிட்ட திரளான அதிகாரிகள் இதில் கலந்துகொண்டனா.

¢  பின்னர் தமிழக நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்களிடம் கூறுகையில், தமிழகம் கர்நாடகாவும் மேகதாது அணை விவகாரத்தில் பேசி தீர்வு காணவில்லை. 38 முறை பேசியும் சுமூக தீர்வில்லை. நடுவர் மன்றம் சென்றோம் நேரடியாக பட்டேலும் ,கலைஞரும்,தேவகவுடாவும் பேசியும் அப்போதே நடக்கவில்லை.

 பேச்சால் இதற்கு தீர்வில்லை என நாங்கள் அறிவித்த பின்னர் அப்போது வி.பி.சிங் நடுவர் மன்றம் அமைத்தார். நாங்கள் உச்சநீதிமன்றத்தில் இது தொடர்பாக வழக்கு தொடர்ந்துள்ளோம் மறுபடியும் சென்று பேசினால் என்ன ஆகும் என கேட்டால் பேசி தீர்க்கிறோம் என ஒன்றை கர்நாடகா கூறுவார்கள்.

 அது பிரச்சணைக்கு தீர்வாகாது. தென் பென்னை ஆற்றில் மார்கண்டேயன் அணை கட்டுகிறார்கள் அதற்கும் நாம் நடுவர் மன்றம் கேட்டோம். ஆனால் அவர்கள் இரண்டாண்டுகளாகியும் இன்னும் பேசவில்லை. பேச்சுவார்த்தை மூலம் தீர்த்துகொள்ளலாம் என்பது தற்கொலைக்கு சமம்.

 கனிமவளத்திற்கு மாநில அரசே வரி விதிக்கலாம் என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது வரவேற்கதக்கது தான். இதுகுறித்து முதல்வர் விரைவில் முடிவு எடுப்பார். அருந்ததியர் உள் இட ஒதுக்கீடு செல்லும் என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது நாங்கள் செல்லும் என கூறியதை தான் அறிவித்தோம்.

 வன்னியர்கள் உள் இட ஒதுக்கீடு குறித்து கேட்டதற்கு அதற்கென்ன செய்வது. இவ்வாறு சொன்னார்.