இன்ஸ்பெக்டர் உட்பட மூவரை தூக்கி அடித்த எஸ்பி! புகாரை சரியாக விசாரிக்காததால் அதிரடி நடவடிக்கை!

இன்ஸ்பெக்டர் உட்பட மூவரை தூக்கி அடித்த எஸ்பி! புகாரை சரியாக விசாரிக்காததால் அதிரடி நடவடிக்கை!

ம.பா.கெஜராஜ்,

பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகார் மீது வழக்குப்பதிந்து நடவடிக்கை எடுக்காத போலீஸ் இன்ஸ்பெக்டர், உதவி ஆய்வாளர், மற்றும் சிறப்பு உதவி ஆய்வாளர் ஆகிய மூன்று பேர் ஆயுதப்படைக்கு மாற்றம், எஸ்பி அதிரடி நடவடிக்கை.

வேலூர் மாவட்டம்,வேப்பங்குப்பம் காவல் நிலையத்தில் சுரேஷ்பாபு என்பவர் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தார். அவர் மீது பொதுமக்கள் பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறி வந்து நிலையில் மாவட்ட காவல் அதிகாரிகள் அவர் மீது அதிருப்தியில் இருந்தனர்.

குறிப்பாக புகார்களின் மீது வழக்கு பதிவு செய்வதில் அலட்சியம் காட்டியதாக அவர் மீது குற்றச்சாட்டுகள் கூறப்பட்டு வந்தன.

இந்நிலையில் கடந்த 19 ஆம் தேதி  பாக்கம்பாளையம் அருகே உள்ள ஒரு ஊரை சேர்ந்த பெண் ஒருவர் பிரேம்குமார் என்ற வாலிபர் இது வேப்பம் குப்பம் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார்.

அந்த புகாரியில்,தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறிவிட்டு இன்ஸ்டாவில் மற்றொரு பெண்ணிடம் தொடர்பில் இருந்தார்.

அதை குறித்து பிரேம் குமாரிடம் அந்தப் பெண் நியாயம் கேட்டதற்கு, தன்னுடன் தனிமையில் இருந்த வீடியோ மற்றும்  போட்டோவை சமூக வலை தளத்தில் பதிவிட்டு உன்னை அசிங்க படுத்திவிடுவேன் என கூறி விரட்டினார்.

ஆகவே பிரேம்குமார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த புகாரில் கேட்டுக் கொண்டிருந்தார்

இதுகுறித்து அவரது காதலி வேப்பங்குப்பம் போலீசில் புகார் அளித்தார். 

இந்த  புகார் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்காமல்  இன்ஸ்பெக்டர் சுரேஷ் பாபு, உதவி ஆய்வாளர் குமார்,, சிறப்பு உதவி ஆய்வாளர் கோபிநாத் ஆகியோர் மெத்தனமாக செயல்பட்டுள்ளனர். புகாரை உரிய வகையில் விசாரிக்காமல் தட்டி கழித்தனர்.

இதனால் பாதிக்கப்பட்ட புகார்தாரரான அந்த பெண், வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில  உள்ள சமூக நலப்பாதுகாப்பு துறையில் புகார் அளித்தார். 

அதேபோல் சில தினங்களுக்கு முன் எல்லப்பன்பட்டி கிராமத்தை சேர்ந்த இரு தரப்பினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மோதிக்கொண்ட போது போதிய பாதுகாப்பு கொடுக்க தவறியதாக வேப்பம் குப்பம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் மற்றும் எஸ்ஐ ஆகியோர் மீது புகார்கள் கூறப்பட்டது.

இது குறித்து விசாரணை மேற்கொண்ட எஸ்.பி.மதிவாணன் , மேற்படி இன்ஸ்பெக்டர் சுரேஷ் பாபு, உதவி ஆய்வாளர் குமார், சிறப்பு உதவி ஆய்வாளர் கோபிநாத் ஆகிய மூன்று பேரையும் ஆயுதப்படைக்கு மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளார்.