சென்னையில் ரவுடிகள் அதிகரிப்பு! பலனளிக்காத நடவடிக்கைகள்?

சென்னையில் ரவுடிகள் அதிகரிப்பு! பலனளிக்காத நடவடிக்கைகள்?

  ஆ.ராஜேஷ் குமார்,

 தமிழகத்தின் தலைநகரான சென்னையில் ரவுடிகளின் எண்ணிக்கை அதிகரித்திருப்பது ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.

 வெல்டிங்குமார், அயோத்திக்குப்பம் வீரமணி, கேட் ராஜேந்திரன், சேரா, ராட்டிணம் குமார்,வெள்ளைரவி, ஜாம் பஜார் முரளி, யூசுப், அப்பு ரெட்டி போன்ற பிரபல கேங் லீடர்களில் தற்போது யாருமே இல்லை.

ஆனாலும் சென்னையில் தாதாயிஸம் குறைந்தபாடில்லை. பல கில்லர்ஸ்கள் இன்றளவுக்கும் இருந்துக் கொண்டு சென்னையின் மறு உலகத்தை ஆட்சி செய்துக் கொண்டிருக்கிறார்கள்.   நடை, உடை, பாவணை, பிராண்டட் ஷூ, கொத்து தங்க நகை, கெத்து பேச்சு என கில்லர்களின் இது போன்ற நடவடிக்கைகளால் இளஞர்கள் பலர் ஈர்க்கப்பட்டு கில்லர் கேங்கில் சேர்ந்துவிடுகிறார்கள்.

  அதன் பின்னர்  அக்கம் பக்கம் கத்தி காட்டி மிரட்டி பஞ்சாயத்தை இழுந்து வருவதில் துவங்கி ராப்ரி வரைக்கும் நீண்டு விடுகிறார்கள்.

  இது போன்ற புள்ளிங்கோஸ் லவ்ஸ்ல வேற கால் பதித்து வீர தீர பராக்ரமங்களை அள்ளி வீசி பந்தா காட்டுவார்கள்.

  இப்பட்டிப்பட்ட புள்ளிங்கோவில் சார்பானவர்களை தேர்வு செய்யும் கேங் லீடர்கள் அவர்களை கொலை போன்ற பாதக செயல்களுக்காக பயன்படுத்துகிறார்கள். அதற்கு கரெக்டா பணம் கொடுத்துடுவாங்க.

  இதன்பால் ஈர்க்கப்பட்ட பல இளைஞர்கள் இது போன்ற கில்லர் கேங்கில் மிங்கில் ஆகிவிடுகிறார்கள்.

  இதனால் சென்னையில் தற்போது ரவுடிகளின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டதாம். 

  சரி காவல் துறையின் ஆய்வை பார்ப்போம்.

இந்த ஆய்வை காவல் துறையினர்தான் நடத்தினர் என்று கூறப்படுவதால் நம்புவதும் நம்பாததும் வாசகர்களின் முடிவே.

   ரவுடிகளின் செயல்பாடுகளின் அடிப்படையில் ரவுடிகளை எ பிளஸ்,ஏ, பி, மற்றும் சி என நான்கு வகைகளாக பிரித்து காவல்துறை பட்டியலிடும்.

    மூன்று கொலைகள் மற்றும் குற்றச் சம்பவங்களில் ஈடுபட்ட ரவுடி எ + வகையில்  பட்டியலிடப்படுவர். இரண்டு கொலைச் சம்பவங்கள் மற்றும் குற்ற வழக்குகளில் தொடர்புடையவர் எ வகை பிரகடனமும் ஒரு கொலை முயற்சி வழக்கு மற்றும் ரவுடிசம் தொடர்பான குற்ற வழக்கு உள்ளவர் பி வகை ரவுடி எனவும் காவல்துறை வகைப்படுத்துகிறது.         பொதுமக்களை மிரட்டி மாமூல் பெறுவது, கொலை மிரட்டல் விடுப்பது சிறுசிறு காயங்கள் ஏற்படுவது போன்ற குற்றங்களை செய்யும் ரவுடிகளை சீ பிரிவிலும் வகைப்படுத்தி அதற்கேற்ற நடவடிக்கையிலும் காவல்துறை மேற்கொண்டு வருகிறது.

  அப்படியிருக்க சென்னையில் ரவுடிகள் நடவடிக்கைகளை ஒடுக்கவும், கொலை போன்ற குற்றங்களை தவிர்க்கவும் அதிதீவிர குற்றத்தடுப்பு பிரிவு ஒன்றை சமீபத்தில் சென்னை காவல் துறையில் உருவாக்கப்பட்டது.

  அதன்படி சென்னையில் தற்போது உள்ள ரவுடிகளை கணக்கெடுக்கும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டனர். புதிய கணக்கெடுப்பில் கடந்த ஆண்டை ஒப்பிடுகையில், இந்த ஆண்டு அதிகளவு ரவுடிகள் உருவாகி இருப்பது தெரியவந்துள்ளது.

   கடந்தாண்டு மே மாதம் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில் 3 ஆயிரத்து 674 ரவுடிகள் இருந்த நிலையில், இந்த ஆண்டு மார்ச் மாதம் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில் 3 ஆயிரத்து 711 ரவுடிகளாக எண்ணிக்கை அதிகரித்திருப்பது  தெரியவந்துள்ளது. 

  அதிலும், எ-பிளஸ் வகை ரவுடிகள் எண்ணிக்கை 69 லிருந்து 92 ஆக அதிகரித்துள்ளனர். கடந்த வருடம் எ பிரிவில் 229 ரவுடிகளும், பி வகையில் 1,481 ரவுடிகளும், சி பிரிவில் 1, 894 ரவுடிகளும் சரித்திர பதிவேடு குற்றவாளிகளாக தரம் பிரித்து வைக்கப்பட்டனர்.

  ஆனால் தற்போது எ பிரிவு 276 ரவுடிகளும், பி பிரிவில் 1, 699 ரவுடிகளும், சி பிரிவில் 1, 644 ரவுடிகளும் என மொத்தம் 3 ஆயிரத்து 711 ரவுடிகள் அதிகரித்து உள்ளதாக காவல்துறை கணக்கெடுப்பின் அடிப்படையில் தகவல் வெளியாகியுள்ளது. 

  மேலும், "டிரைவ் அகைன்ஸ்ட் ரவுடி எலிமென்ட்ஸ்" என்ற ஆப்ரேஷன் மூலமாக கடந்த ஆறு மாதத்தில் 130 ரவுடிகளை சென்னை காவல்துறை கைது செய்துள்ளது.

  காக்கா தோப்பு பாலாஜி, எண்ணூர் தனசேகரன், சி-டி மணி, கிழங்கு சரவணன் உட்பட பல ஏ-பிளஸ் ரவுடிகள் கைது செய்யப்பட்டு சிறைக்கு அனுப்பப்பட்டனர்.

  கடந்த வருடத்தில் மட்டும் 99 ரவுடிகள் குண்டர் சட்டத்தின் கீழ் அடைக்கப்பட்டுள்ளனர். 883 சரித்திர பதிவேடு குற்றவாளிடம் குற்றவியல் நடைமுறை சட்டத்தின் கீழ் பிரமாண பத்திரத்தில் கையெழுத்திட்டு உள்ளனர். பிரமாண பத்திரத்தை மீறிய 43 ரவுடிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நடவடிக்கைகள் இருந்தும் ரவுடிகள் எண்ணிக்கை சென்னையில் ஜாஸ்தியாகினே கீதுப்பா.