அல்லேரி மலைக்கு விரைவில் சாலை அமைக்கப்படும்-சட்டமன்ற உறுப்பினர் பேச்சு!

கு.அசோக்,
அல்லேரி மலைக்கு விரைவில் சாலை அமைக்கப்படும் அனைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் நந்தகுமார் பேச்சு - ஜவ்வாது மலை தொடர் கிராமங்களான பீஞ்சமந்தை ,உள்ளிட்ட கிராமங்களுக்கு சாலை வசதி பால் குளிரூட்டும் நிலையம் 100 பேருக்கு கறவை மாடுகள் வழங்கும் விழா - மாவட்ட ஆட்சியர் வே.இரா.சுப்பு லெட்சுமி பங்கேற்பு
வேலூர்மாவட்டம்,அனைக்கட்டு வட்டத்திற்குட்பட்ட பீஞ்சமந்தை ஊராட்சியில் ரூ.1. 81 கோடி மதிப்பீட்டில் இரண்டு சாலைகள் நியாயவிலைக்கட்டிடம் அங்கன்வாடி மைய கட்டிடம் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கம் மற்றும் 65 பயனாளிகளுக்கு ரூ.81 லட்சம் மதிப்பில் கடனுதவிகள் வழங்கும் விழா மாவட்ட ஆட்சியர் சுப்பு லெட்சுமி தலைமையில் நடைபெற்றது.
இதில் அனைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் நந்தகுமார் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இதில் அனைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் நந்தகுமார் பேசுகையில் ஜவ்வாது மலை தொடரில் உள்ள பீஞ்சமந்தை,பாலாம்பட்டு,ஜார்தான் கொல்லை சுற்றுவட்டார கிராமங்களுக்கு சாலை வசதிகளை ஏற்படுத்தி கொடுத்திருக்கிறோம்.
இந்த ஆண்டு பீஞ்சமந்தை அரசு உயர்நிலைப்பள்ளி மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்படும் பழங்குடியின மக்களுக்கு தேவையான வசதிகளை நாங்கள் செய்து கொடுக்கிறோம் அல்லேரி மலைக்கும் விரைவில் சாலை வசதி ஏற்படுத்தி தரப்படும் என்று பேசினார்
பின்னர் மாவட்ட ஆட்சியர் சுப்பு லெட்சுமி மற்றும் அனைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் நந்தகுமார் கூட்டாக செய்தியாளர்களிடம் கூறுகையில், மலைப்பகுதியில் பீஞ்சமந்தையில் முத்துக்குமரன் மலை முதல் பீஞ்சமந்தை வரை சாலை வசதி ஏற்படுத்திக் கொடுத்துள்ளோம்.
பெண் குழந்தைகளுக்கான விடுதியை கட்டியுள்ளோம், மலைப்பகுதி மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு அவர்கள் முன்னோற்றம் அடைய பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கம் கட்டிடம் திறந்துள்ளோம் என ஆட்சியர் கூறினார்.
மலைகிராமமான பீஞ்சமந்தைக்கு பேருந்து இயக்குவது சாத்தியமில்லை என சட்டமன்றத்தில் போக்குவரத்துத்துறை அமைச்சர் கூறியது குறித்து அனைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் நந்தகுமார் கூறுகையில், முதல் முதலில் தார் சாலை போட்டவுடன் இம்மலை கிராமத்திற்கு நீர் வளம் வன மற்றும் நிதித்துறை அமைச்சர்கள் இங்கு வந்தனர்.
மேலே பேருந்தை ஏற்றி பார்த்தோம் பேருந்து மேலே வந்தது ஆனால் வளைவுகளில் திரும்ப முடியாமல் அவதியடைந்தனர்.
மினி பேருந்து வாங்கியுள்ளனர் அது வந்தவுடன் இம்மலை கிராமத்திற்கு தருவதாக சொன்னார்கள் அங்கு பேருந்து திரும்பும் இடத்தில் சிமெண்ட் சாலை அமைத்து தர சொல்லியுள்ளார் அதனையும் செய்வோம்.
தேந்தூர் கிராமத்தில் 5 கிலோ மீட்டருக்கு ஜல்லி சாலை அமைக்கவுள்ளோம் அது இன்னும் 3 ஆண்டுகளில் சாலையாக அமைக்கபடும். அடுத்தகட்டமாக தார் சாலையும் அமைப்போம் மக்கள் குடிநீர் பிரச்சணையை தீர்க்க சொல்லியுள்ளனர் என கூறினார்.
மேலும் ஆட்சியர் கூறுகையில் யார் யாருக்கெல்லாம் சாதி சான்றிதழ் ஆதார் அட்டை இல்லாதவர்களுக்கும் முகாம் நடத்தி மலை கிராமத்தில் நடவடிக்கை எடுக்கபடும் என ஆட்சியர் சொன்னார்.