எடப்பாடி பழனிச்சாமி பிறந்தநாள் விழா! ரத்தானம் வழங்கிய தொண்டர்கள்!

எடப்பாடி பழனிச்சாமி பிறந்தநாள் விழா! ரத்தானம் வழங்கிய தொண்டர்கள்!

கு.அசோக்,

வாலாஜா  அருகே முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பிறந்த நாளையோட்டி அதிமுக கட்சி தொண்டர்கள் ரத்ததானம் செய்தனர்.

 இராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜா  அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் மேற்கு மாவட்ட அதிமுக அண்ணா தொழிற்சங்கம் மற்றும் தகவல் தொழில்நுட்ப பிரிவு மற்றும் மருத்துவ அணி ஆகியோர் ஏற்பாட்டில் முன்னாள் தமிழகத்தின் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியின் 71-வது பிறந்த நாள் கொண்டாடப்பட்டது.

  அப்போது உயிர் கொடுக்கும் ரத்ததான முகாம் நிகழ்ச்சி மேற்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் ஏழில்அரசன் மற்றும் அண்ணா தொழிற்சங்க மாவட்ட செயலாளர் புல்லட் மூர்த்தி ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.

 இதற்கு மேற்கு மாவட்ட செயலாளர் எஸ்.எம்.சுகுமார் சிறப்பு விருந்தினராக வருகை தந்து ரத்தான முகாமை தொடங்கி வைத்ததோடு மருத்துவக் குழுவினர் மூலமாக ரத்தத்தை தானமாக வழங்கும் கொடையாளர்களின் உடல்நிலைகளை முழுவதுமாக பரிசோதித்து பிறகு ரத்தங்களை சேகரித்தனர்.

 மேலும் பிறர் உயிர் காக்க ரத்தத்தை தானமாக வழங்கிய அதிமுக கட்சியை சார்ந்த ஏராளமான கட்சி தொண்டர்களுக்கு பழச்சாறு பிஸ்கட் ஆகியவை வழங்கப்பட்டு அனைவரையும் கௌரவிக்கும் விதமாக பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.

 வாணியம்பாடி

 திருப்பத்தூர் மாவட்டம்,வாணியம்பாடியில் உள்ள திருப்பத்தூர் மாவட்ட அதிமுக தலைமை அலுவலகத்தில் தமிழக எதிர்கட்சி தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி. பழனிச்சாமியின் பிறந்தநாளையொட்டி நிகழ்சிகள் நடைபெற்றது.

  மாவட்ட  அதிமுக தகவல் தொழில்நுட்ப அணி சார்பில் நடைப்பெற்ற ரத்ததான முகாமினை அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி மற்றும், அதிமுக கொள்கைபரபரப்பு செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான   தம்பிதுரை ஆகியோர் ரத்ததான முகாமினை துவக்கி வைத்து ரத்தம் வழங்கினர்,

 இதில் வாணியம்பாடி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார் மற்றும்  100க்கும் மேற்பட்ட  அதிமுக நிர்வாகிகள் தொண்டர்கள் பலர் பங்கேற்று ரத்தம் வழங்கினர்.