மேயர் ப்ரியா புட்போர்ட் அடித்தது சரியே!அமைச்சர் சேகர் பாபு பேட்டி!

ஜி.சாந்தகுமார்,
சென்னை மேயர் ப்ரியா கடந்த சில தினங்களுக்கு முன்னர் காரில் புட் போர்ட் அடித்து தலைப்பு செய்திகளில் இடம் பிடித்தார்.
அவர் புட்போர்ட் அடித்த வாகனம் முதலமைச்சரின் கான்வாயில் வந்தது என்பதால் விஷயம் முக்கிய இடத்தை பிடித்தது.
இந்நிலையில் இதுகுறித்து அமைச்சர் சேகர் பாபு சில கருத்துக்களை மு வைத்துள்ளார்.
அதில், துணிச்சலாக பெண் செய்யும் பணியை விமர்சிக்க கூடாது.
ஆணுக்கு நிகராக ஒரு பெண்மணி இப்படிப்பட்ட துணிச்சலோடு செய்கின்ற பணிகளை பாராட்ட வேண்டுமே தவிர விமர்சிப்பது தேவையற்ற ஒன்றாகும்.
புயல் காற்றினால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதலமைச்சர் பார்வையிட சென்றபோது, சென்னை மாநகராட்சி மேயர் பாதுகாப்பு வாகனத்தில் பயணித்தது என்பது முதலமைச்சரோடு அந்தந்த பகுதிகளுக்கு சென்று மக்கள் பணியாற்ற வேண்டும் என்ற துடிப்போடு நடந்த செயலாகும்.
பாரதியாரின் பிறந்தநாளை கொண்டாடும் இந்த வேளையில் ஆணுக்கு நிகராக ஒரு பெண்மணி இப்படிப்பட்ட துணிச்சலோடு செய்கின்ற பணிகளை பாராட்ட வேண்டுமே தவிர அதை விமர்சிப்பது தேவையற்ற ஒன்றாகும் என்றார்.