ஓய்வூ பெற்ற கட்டிட தொழிலாளர்களுக்கு மாதம் ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும்! ஆர்.டி.பழனி பேச்சு!

ஜி.கே.சேகரன்,
கட்டுமான தொழிலாளர்களுக்கு வழங்கபடும் ஓய்வூதியத்தை தமிழக அரசு உயர்த்தி வழங்கவில்லை எனவே கட்டுமான தொழிலாளர்கள் ஓய்வூதியத்தை உயர்த்த கோரி விரைவில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடுவோம் மாநில பொதுகுழுவில் அகில இந்திய அமைப்புசாரா கட்டுமான தொழிலாளர் சங்க தலைவர் ஆர்.டி.பழனி பேச்சு.
வேலூர்மாவட்டம், திருப்பாக்குட்டை கிராமத்தில் அமைப்புசாரா மட்டும் கட்டுமான தொழிலாளர் நல மாநில பொதுகுழு கூட்டம் மற்றும் சமத்துவ பொங்கல் விழா மாநில தலைவர் வேல்முருகன் தலைமையில் நடைபெற்றது.
இதில் மாநில செயலாளர் கயல்விழி, தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் நலவாரிய உறுப்பினர் கனேசன், வேலூ£ ¢மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் சீனிவாசன், அகில இந்திய கட்டுமான மற்றும் அமைப்புசாரா தொழிலாளர் சங்கத்தின் அகில இந்திய தலைவரும் தமிழ்நாடு ஆட்டோ தொழிலாளர் நலவாரிய உறுப்பினர் .ஆர்.டி பழனி,உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
அப்போது, கட்டுமான தொழிலாளர்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டன.
இதில் அகில அமைப்புசாரா கட்டுமான தொழிலாளர் சங்க கூட்டமைப்பின் அகில இந்திய தலைவர் ஆர்.டிபழனி பேசுகையில், கட்டுமான தொழிலாளர்களுக்கு பென்ஷன் ரூ.1200 தான் வழங்கபடுகிறது.
சாதாரண முதியோர்களுக்கே 1200 வழங்குகிறார்கள் ஆனால் அதே தொகையை வாரியத்தில் உள்ளவர்களுக்கு வழங்குவது எந்த வகையில் நியாயம்.
நாங்களும் பல முறை அரசின் கவணத்திற்கு கொண்டு சென்றோம் ஆனால் அரசு அந்த ஓய்வூதியத்தை உயர்த்தி வழங்காமல் காலம் தாழ்த்துகிறது.
இதனால் பல்லாயிரக்கணக்கான கட்டுமான ஓய்வு பெற்ற தொழிலாளர்கள் பாதிக்கபடுகின்றனர். ரூ.10000 ஆயிரம் கோடி கட்டுமான வாரியத்தில் நிதி உள்ளது.
இதற்கென தனி வங்கியை ஏற்படுத்த வேண்டும், ஓய்வூ பெற்ற தொழிலாளர்களுக்கு ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும் மேலும் தனி அமைச்சகம் ஒன்ற கட்டுமான தொழிலாளர்களுக்கு உருவாக்க வேண்டும்.
இதுபோன்ற பல கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு தழுவிய அளவில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடவுள்ளோம் என்று பேசினார்.
இதில் சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கட்டுமான தொழிலாளர்கள் பங்கேற்றனர்.