ரிடையர்டு தினத்தில் சஸ்பெண்டு செய்யப்பட்ட ஆர்.டி.எம்.ஏ!

ரிடையர்டு தினத்தில் சஸ்பெண்டு செய்யப்பட்ட ஆர்.டி.எம்.ஏ!

 எம்.ரமேஷ் பாபு,

  ரிடையர்டு ஆகும் தினத்தில் தமிழ்நாடு அரசு நகராட்சிகளின் வேலூர் மண்டல இயக்குநர் (ஆர்.டி.எம்.ஏ) குபேந்திரன் என்பவர் சஸ்பெண்டு செய்யப்பட்டிருக்கிறார்.

   இந்த சங்கதியை சம்மந்தப்பட்ட அலுவலகத்தினர் கமுக்கமாக வைத்திருக்கிறார்கள்.

  மேற்படி குபேந்திரன் ஏற்கனவே வேலூர் நகராட்சியின் கமிஷனராக இருந்தார். அதன் பின்னர் வேலூர் மாநகராட்சியாக அந்தஸ்த்து உயர்த்தப்பட்ட பின்னர், இ.குமார் என்பவர் மாநகராட்சி ஆணையளாராக இருந்து லஞ்ச ஒழிப்பு பிரிவில் சிக்கி சீட்டை காலி பண்ணினார்.

  அவருக்கு பதில் அந்த சீட்டை குபேந்திரன் பிடித்தார். ஒரு மாத காலம் அந்த பதவியிலிருந்த இவர் மீதும் லஞ்ச ஒழிப்பு பிரிவின் பார்வை படர்ந்தது.

  ஆகவே அவரை நெருங்கி பிடித்து சோதனையிட்ட போது அவரிடம் ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் பணம் இருந்ததை கண்டுபிடித்து அதை பறிமுதல் செய்தனர். அதே போல் மேலும் இருவரிடம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

  இந்த வழக்கு தற்போது முடிவுக்கு வராத நிலையில் அய்யா குபேந்திரன் ரிடையர்டு ஆக இருந்தார்.

  ஆனால் அவரை அரசு சஸ்பெண்டு செய்திருக்கிறது.

 குறிப்பு:- வேலூரின் பணக்காரர்கள் வசிக்கும் பகுதி என்று சொல்லப்படும் கிருஷ்ணா நகரில் எல்/ஜி.என்கிற குருப்பினர் அடுக்குமாடி வீடு கட்டினார்கள். அதில் குபேந்திரன் ஒரு பிளாட்டை வாங்க முற்பட்டு அவர்களை அனுகி அடிமாட்டு விலைக்கு கொடுக்கும்படி மிரட்டியிருக்கிறார்.

  ஜெனுயினான அந்த பில்டர் குபேந்திரனுக்கு பிளாட் விற்க மறுத்துவிட்டனர். இருந்தாலும் விடாத குபேந்திரன் குடும்பத்துடன் லோக்கல் எம்.எல்.ஏ வை சந்தித்து கெஞ்சி கூத்தாடி ஒரு பிளாட்டை வாங்ங்கினாராம்.