மாணவரை தாக்கிய இன்ஸ்பெக்டர் 'சஸ்பெண்டு'!

அ.அரவிந்த்,
மாணவரை தாக்கிய, சைபர் க்ரைம் இன்ஸ்பெக்டர் 'சஸ்பெண்டு' செய்யப்பட்டுள்ளார்.
இது பற்றின விவரம் வருமாறு,
விழுப்புரம் ஆட்சியர்¢ அலுவலக பாதையில் மகேந்திரன் என்கிற மாணவர் தர்ணாவில் ஈடுபட்டார். இவர், விழுப்புரம் அடுத்த கோலியனூரைச் சேர்ந்தவர் ஆவார். அண்ணா அரசு கலைக்கல்லூரியில் இயற்பியல் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார்.
இவர், காட்டுநாயக்கன் சாதிச் சான்றிதழ் கேட்டு, விழுப்புரம் ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் விண்ணப்பித்துள்ளார். இதற்காக, நேற்று முன்தினம் ஆர்.டி.ஓ., அலுவலகத்திற்கு வந்த மகேந்திரனை, அலுவலர்கள் அலைக்கழித்துள்ளனர்.
வெறுப்படைந்த மகேந்திரன், விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று முன்தினம் இரவு 10:00 மணியளவில் திடீர் தர்ணாவில் ஈடுபட்டார்.
தகவலறிந்த விழுப்புரம் தாலுகா போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர். அப்போது, அந்த வழியாகச் சென்ற விழுப்புரம் சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர் கணபதி, திடீரென மகேந்திரனை தாக்கினார்.
அங்கு பணியில் இல்லாத இன்ஸ்பெக்டர் கணபதி, மகேந்திரனை தாக்கிய வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது.இதையடுத்து, இன்ஸ்பெக்டர் கணபதியை 'சஸ்பெண்ட்' செய்து, டி.ஐ.ஜி., பாண்டியன் உத்தரவிட்டுள்ளார்.
சரி இதன் பிறகாவது மகேந்திரனுக்கு சாதி சான்று கிடைக்குமா?