ஏலகிரிமலையில் விபச்சாரம்? ஞாயிறு அன்று போக்குவரத்து பாதிப்பு!

ஜி.கே.சேகரன்,
ஏலகிரி மலையில் விடுமுறை காரணமாக குவிந்த சுற்றுலா பயணிகள் கொண்டை ஊசி வளைவில் டிராபிக் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது, மேலும் விலைவாசியும் அதிகம், விபச்சார தொழிலும் நடப்பதாக பலர் புலம்புகிறார்கள்.
திருப்பத்தூர் மாவட்டத்தில், ஏழைகளின் ஊட்டி என்றழைக்கப்படும் ஏலகிரி மலை அமைந்திருக்கிறது. தமிழ்நாட்டின் மிக முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றாக விளங்கி வரும் இங்கு அமைந்துள்ள அரசு மற்றும் தனியார் சுற்றுலா அம்சங்கள் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் உள்ளன.
இதனால் வெளி மாவட்டங்கள் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான மக்கள் வந்து செல்கின்றனர்.
இங்குள்ள அரசு சுற்றுலா தலங்களான படகு இல்லம், இயற்கை பூங்கா, சிறுவர் பூங்கா ஆகியன சுற்றுலா பயணிகளை அதிகளவில் கவர்ந்து வருகிறது.
எனவே, விடுமுறை நாட்களில் ஏலகிரி மலைக்கு வரும் சுற்றுலா பயணிகள் அங்குள்ள தங்கும் விடுதிகளில் தங்கி, அனைத்து சுற்றுலா தலங்களையும் கண்டு பொழுதுப்போக்கி செல்கின்றனர்.
இந்நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை தினம் என்பதால் ஏலகிரி மலையை சுற்றி பார்க்க ஏராளமான சுற்றுலா பயணிகள் திரண்டிருந்தனர்.
இதனால் சுற்றுலா பயணிகளால் கொண்டுவரப்பட்ட வாகனங்கள் திடீரென ஏலகிரி மலை கொண்டை ஊசி வலைவில் வரிசைகட்டி நின்றன. இதன் காரணமாக சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது மேலும் சுற்றுலாப் பயணிகளும் அவதி உற்றனர்.
இது ஒரு பக்கம் இருக்க மலையில் உள்ள ஓட்டல்கள் மற்றும் கடைகளில் டபுள் ரேட்டுக்கு விற்பனை செய்து வியாபாரிகள் சிலர் அடாவடியாக பணம் சம்பாதித்தனர்.
மலையில் உள்ள சில தங்கும் விடுதிகளில் விபச்சார தொழில் கொடிகட்டி பறப்பதாக கூறப்படுகிறது. குறிப்பிட்ட ஒரு சில அதிகாரி சார் களுக்கு அங்கெல்லாம் மாமுலாக சலுகைகள் கிடைப்பதால் இந்த சமாச்சாரம் உயர் அதிகாரிகளின் பார்வைக்கு செல்லாமல் தடுக்கப்பட்டு வருகிறதாம்.
ஆகவே இதை நேரடியாக அதிகாரிகளின் பார்வைக்கு புகாராக கொண்டு செல்ல ஒரு அமைப்பு தயாராம்.
குறிப்பு: திருப்பத்தூர் ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டமாக இருந்தபோது தர்மேந்திர பிரதாப் யாதவ் என்கின்ற ஒரு கலெக்டர் இருந்தார். அவருடைய காலத்தில் தான் ஏலகிரி மலை சூப்பராக டெவலப் செய்யப்பட்டது. ஆனால் தற்பொழுது அவை அனைத்தும் பராமரிப்பின்றி பாழ்பட்டு கிடைக்கிறது. முக்கியமாக யாத்திரிநிவாசை சுட்டிக்காட்டலாம்.