பாஜக கூட்டணியில் எனக்கு ஐந்து சீட்டு கொடுங்க ப்ளீஸ்! ஓ.பி.எஸ். விருப்பக் கடிதம்!

Ma.ba.Gajaraj,
பா.ஜ.க.வை தவிர்த்து மற்ற கட்சிளை இணைத்து நாடாளுமன்ற தேர்தலை சந்திக்க எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக தீவிரம் காட்டி வருகிறது. ஆனால் ஓ.பன்னீர்செல்வம் அண்ட் கோவினர் பா.ஜ.க. கூட்டணியில் இடம் பெற்று தேர்தலில் போட்டியிட முயன்று வருகின்றனர்.
அந்த வகையில் ஓ.பி.எஸ்., தனது மகன் ரவிந்திரநாத்துக்கு பாஜக கூட்டணியில் சீட்டு பிடிக்க துண்டு விரித்திருக்கிறார். அவரது டீமைச்சேர்ந்த ஐந்து பேருக்கு சீட்டு வேண்டுமாம்.
அவரது மகன் ரவீந்திரநாத் கடந்த முறை தேனி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதே போல இந்த முறையும் அந்த தொகுதியில் மகனை நிறுத்த முடிவு செய்துள்ளார்.
அதுமட்டுமின்றி 5 தொகுதிகளை கேட்டு பா.ஜ.க. தலைவரிடம் கடிதம் கொடுத்துள்ளார். ஓ.பன்னீர்செல்வத்தின் நெருங்கிய ஆதரவாளர்களான கோபால கிருஷ்ணன் (மதுரை), ஜே.சி.டி. பிரபாகர் (ஸ்ரீபெரும்புதூர்), புகழேந்தி, முன்னாள் எம்.எல்.ஏ. சுப்புரத்தினம், மற்றும் சென்னை மாவட்ட செயலாளர் வக்கீல் எம்.வி. சதீஷ் ஆகியோரில் சிலரை வேட்பாளராக நிறுத்தவும் முடிவு செய்துள்ளார்.
எடப்பாடி அண்ட் கோ வினரால் அ.தி.மு.க.வில் இருந்து ஓரம் கட்டப்பட்ட தன்னை இந்த தேர்தல் மூலம் அ.தி.மு.க. தொண்டர்கள் தன் பக்கம் இருக்கிறார்கள் என்பதை உறுதிப்படுத்தவும் ஓ.பி.எஸ் திட்டமிட்டிருக்கிறார்.
இந்த திட்டம் எந்த அளவுக்கு ஒர்கவுட் ஆகும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.