முதலமைச்சர் கோப்பை சிலம்பம் போட்டியில் பெற்றோர் ஆத்திரம்!

ஜி.கே.சேகரன்,
காட்பாடியில் உள்ள மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் முதலமைச்சர் கோப்பைக்கான சிலம்பம் விளையாட்டு போட்டியினை மாவட்ட ஆட்சியர் பெ.குமாரவேல் பாண்டியன்,இ.ஆ.ப. அவர்கள் துவங்கி வைத்தார்
வேலூர் மாவட்டம், காட்பாடியில் உள்ள தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மைதானத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பைக்கான சிலம்பம் போட்டிகள் இன்று துவங்கியது.
இதனை வேலூர்மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் துவங்கி வைத்தார்.
இதில் சுமார் 400-க்கும் மேற்பட்ட வீரர் வீராங்கனைகள் பங்கேற்று ஒற்றை சிலம்பம் இரட்டை சிலம்பம் சிலம்ப சண்டை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.
இப்போட்டிகள் வரும் 11 ஆம் தேதி வரையில் மூன்று நாட்களாக நடக்கிறது.
இந்த துவக்க விழாவில் மேயர் சுஜாதா துணை மேயர் சுனில் மண்டல குழு தலைவர் புஷ்பலதா மற்றும் மாமன்ற உறுப்பினர் விமலா சீனிவாசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்த சிலம்பாட்ட போட்டிகளுக்காக காலை முதலே மாணவ,மாணவிகள் காத்திருந்தனர் ஆனால் உரிய முன் ஏற்பாடுகளை செய்யாமல் உணவு குடிநீர் உள்ளிட்ட வசதிகளை செய்யாததால் ஆத்திரமடைந்த மாணவர்களின் பெற்றோர்கள் மாவட்ட விளையாட்டு அலுவலர் நோயலின் ஜானை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் இதனால் பரபரப்பு ஏற்பட்டது.