பாஜகவுடன் விடிய விடிய கூட்டணி பேசிய ஓபிஎஸ் - டிடிவி! அதிமுக எதிர் பார்த்த கூட்டணிகள் டாட்டா காட்டின!!

உ.சசிகுமார்,
கிண்டியில் உள்ள தனியார் ஓட்டலில் பாஜக நிர்வாகிகளுடன் ஓ.பி.எஸ், டி.டி.வி. தினகரன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறப்படுகிறாது. நேற்றிரவு 11 மணிக்கு தொடங்கிய தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை அதிகாலை 2 மணி வரை நடைபெற்றதாம்.
பாஜகவுடன் நடந்த பேச்சுவார்த்தையின் போது ஓ.பி.எஸ்.ஸுடன் வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியனும் உடன் இருந்ததாக சொல்லப்படுகிறது.
இந்த பேச்சு வர்த்தையில் ஓபிஎஸ் க்கு நான்கு சீட்டும் அதே போல் தினகரன் கட்சிக்கு நான்கு சீட்டு கொடுப்பதாக பாஜக உடன் ஒப்பந்த முடிவானதாம்.
இது குறித்து முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும், டிடிவிதினகரனும் கூறியதாக சில தகவல்கள் வெளியாகின., அதில் பாஜக கூட்டணியில் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் இரட்டை இலை சின்னத்தில் தான் போட்டி. இரட்டை இலை சின்னம் பயன்படுத்துவதில் தற்காலிகமாகத் தான் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இரட்டை இலைச் சின்னம் குறித்து தேர்தல் ஆணையம் முடிவு எடுக்கும். வழக்கு இன்னும் நிலுவையில் தான் உள்ளதுமென ஒபிஎஸிம்,
அதே போல் டிடிவி தினகரன், பாஜக கூட்டணியில் நான் எந்த நிபந்தனையும் வைக்கவில்லை, எந்த நிர்பந்தமும் எனக்கு கிடையாது. தேர்தலை எதிர்கொள்வது குறித்து ஆலோசனை நடத்தினோம், தொகுதிகள் இறுதியானதும் தெரிவிக்கிறேன்.
அமமுக போட்டியிட சின்னம் தொடர்பாக எந்த நிர்பந்தமும் இல்லை, அச்சுறுத்தலும் இல்லை. குக்கர் சின்னம் வேண்டுமென உரிய நேரத்தில் தேர்தல் ஆணையத்தில் மனு தாக்கல் செய்திருக்கிறோம். அமமுக வளர்ந்து வரக்கூடிய கட்சி, நிர்வாகிகள் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதைத் தான் விரும்புகிறார்கள்.
நாடாளுமன்ற தேர்தலில் அமமுக போட்டியிட விரும்பும் தொகுதிகள் பட்டியலை அண்ணாமலையிடம் கொடுத்துள்ளோம் என சொன்னதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், பாஜக கூட்டணியில் பாமகவுக்கு 8 தொகுதிகளும் ஒரு மாநிலங்களவை இடம் ஒதுக்க பாஜக முடிவு எனவும், அதே போல் தேமுதிகவை அனுக இருப்பதாகவும் பாஜக வட்டார தகவல் கூறுகியிருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.