திமுக வேட்பாளர் பட்டியல் ஓரிரு நாளில் வெளியிடப்படும்! அமைச்சர் துரைமுருகன் பேட்டி!

ஜி.கே.சேகரன்,
திமுக வேட்பாளர் பட்டியல் ஓரிரு நாளில் வெளியிடப்படும், அதிமுக நாடாளுமன்றத்தில் குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவாக வாக்களிக்காமல் இருந்திருந்தால் இன்று அந்த சட்டமே வந்திருக்காது, எடப்பாடி தற்போது எதிர்ப்பது தவறு கர்நாடக அரசு காவிரியில் தண்ணீரை திறக்கவில்லை என்றால் மீண்டும் உச்சநீதிமன்றத்தை அனுகி பெறுவோம் அமைச்சர் துரைமுருகன் காட்பாடியில் பேட்டி.
வேலூர்மாவட்டம், காட்பாடியில் வேலூர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலையின் கூட்டுறவு பெட்ரோல் பங்க் திறப்பு விழாவானது மாவட்ட ஆட்சியர் வே.இரா.சுப்புலெட்சுமி தலைமையில் நடந்தது. இதனை தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் திறந்து வைத்தார். இவ்விழாவில் வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த் சட்டமன்ற உறுப்பினர் கார்த்திகேயன் மேயர் சுஜாதா, மண்டல குழு தலைவர் புஷ்பலதா, துணை மேயர் சுனில் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் துரைமுருகன், கர்நாடக எப்போது பார்த்தாலும் தண்ணீரை தரமாட்டேன் என்று தான் சொல்வார்கள் எந்த கர்நாடக மந்திரியாவது நாங்கள் தமிழகத்திற்கு தண்ணீரை திறந்துவிடுகிறோம் என சொல்லியது கேள்விபட்டுள்ளீர்களா. ஒவ்வொரு முறையும் உச்சநீதிமன்றம் சென்று ஆணையை பெற்று தண்ணீரை பெறுகிறோம் .
இந்த முறையும் தண்ணீரை திறக்கவில்லை என்றால் உச்சநீதிமன்றம் அனுகி தண்ணீரை பெறுவோம்.
குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவாக அதிமுக அப்போது வாக்களித்தது, அவர்கள் வாக்களிக்காமல் இருந்திருந்தால் அந்த சட்டம் நிறைவேறி இருக்காது. எடப்பாடி முன்னர் வாக்களித்து விட்டு, இப்போது எதிர்ப்பது என்பது தவறு. மேலும் திமுக வேட்பாளர்கள் பட்டியல் ஓரிருநாளில் வெளியிடப்படும் இன்று காங்கிரசுடன் பேசி முடிக்கிறோம் என கூறிவிட்டு சென்றார்.