நோ டவர் ப்ளீஸ்!

நோ டவர் ப்ளீஸ்!

 கு.அசோக்,

   காட்பாடி அருகே செல்போன் டவர் அமைக்க பொது மக்கள் எதிர்ப்பு தெருவித்து சாலை மறியல்.

  வேலூர் மாவட்டம், காட்பாடி அடுத்துள்ள காசிகுட்டை கிராமத்தில் தனியார் நிறுவனம் சார்பில் தனியாருக்கு சொந்தமான நிலத்தில் செல்போன் டவர் அமைக்க இருப்பதாகவும், செல்போன் டவர் அமைக்கப்பட்டால் தங்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்பதால் டவர் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதியை சேர்ந்த பெண்கள் உட்பட சுமார் 30 க்கும் மேற்பட்டோர்  சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 மேலும், கழிஞ்சூரிலிருந்து அன்னங்குடி செல்லும் சாலையில், அரசு பேருந்தை சிறைபிடித்து சுமார் அரை மணி நேரத்துக்கு மேலாக மறியல் தொடர்ந்தது.

 இந்நிலையில் அதிகாரிகள் யாரும் வராததால் அவர்களாகவே கலைந்து சென்றனர்.