நிர்வாண படம் செட்டப்:- ஆன்லைன் கடன் பறிபோன உயிர்!

நிர்வாண படம் செட்டப்:- ஆன்லைன் கடன் பறிபோன உயிர்!

க.பாலகுரு,

 வலங்கமான் அருகே ஆன்லைன் செயலி மூலம் கடன் பெற்றவரின் புகைப்படத்தை நிர்வாணமாக்கி பணம்கேட்டு மிரட்டல் விடுத்ததால் இளஞர் விஷம் அருந்தி தற்கொலை!

திருவாரூர் மாவட்டம் வலங்கமான் அருகில் உள்ள ஏரி வேலூர் பகுதியைச் சேர்ந்தவர் ஸ்டாலின் . இவரது இளைய மகன் ராஜேஷ் வயது 27. இவர் கும்பகோணத்தில் உள்ள நுண்கடன் வழங்கும் தனியார் நிதி நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். ராஜேஷ் மொபைல் போன் மூலம் ஆன் லைன் கடன் வழங்கும் செயலி மூலம் அடிக்கடி கடன் பெற்று அதன திருப்பி செலுத்தி வந்துள்ளார்.

 இந்தநிலையில் இறுதியாக இன்ஸ்டாகிராமில் வந்த லிங்க் மூலம் கடன் வழங்கும் செயலிக்கு சென்று ஆன்லைன் மூலம் அவர் கடன் பெற்றதாக கூறப்படுகிறது.அந்த கடன் தொகையினையும் அவர் ஒரு வருடத்திற்கு முன்பே செலுத்தி உள்ளதாக கூறப்படுகிறது. அப்படியிருக்க ஆன்லைனில் கடன் வழங்கிய நிறுவனத்தினர் வாட்ஸ் அப் மூலம் ராஜேஷுக்கு தொடர்ந்து பணம் கேட்டு தொந்தரவு கொடுத்து வந்துள்ளனர்.மேலும் வாட்ஸ் அப் வீடியோ காலிலும் ராஜேஷிடம் அவர்கள் பேசியதாக கூறப்படுகிறது.

  அதனை தொடர்ந்து ராஜேஷின் புகைப்படத்தை மார்பிங் செய்து நிர்வாணமாக்கி அதனை ராஜேஷுக்கு அனுப்பி பணம் கட்டும்படி மிரட்டியதாக கூறப்படுகிறது.  இதனால் மிகுந்த மன உளைச்சலில் இருந்த ராஜேஷ் வயலுக்கு அடிக்கும் பூச்சி மருந்தை உட்கொண்டு தற்கொலைக்கு முயன்று மயங்கி நிலையில் உறவினர்கள் அவரை உடனடியாக மீட்டு தஞ்சாவூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு  சென்றுள்ளனர்.அப்போது ராஜேஷ் பாதி வழியிலேயே உயிரிழந்துள்ளார்.

   இதனையடுத்து இது குறித்து வலங்கைமான் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் காவல்துறையினர் ராஜேஷின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு பிறகு உறவினர்களிடம் ஒப்படைத்தனர். மேலும் ராஜேஷுக்கு வந்த வாட்ஸ் அப் கால் சவுத் ஆப்பிரிக்காவில் இருந்து வந்துள்ளதாக காவல்துறையினரின் விசாரணையில் தற்போது தெரியவந்துள்ளது. இது குறித்து காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

   திருமணமாகாத இளைஞர் ஆன்லைன் மூலம் கடன் பெற்றதால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக தற்கொலை செய்து கொண்ட சம்பவம் இந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.