காவல் துறையினரை இழிவுபடுத்திய நாகர்கோவில் பாஜகவினர்!
கே.ஏ.ஜெகதீஷ்வரி,
காவல் துறையினரை இழிவுபடுத்தி பேசிய நாகர்கோவில் பாஜகவினரைப் பார்த்து மக்கள் வெறுப்படைந்தனர்.
ராகுல் காந்தியின் மீதான நடவடிக்கையை கண்டித்து நாகர்கோவில் பாஜக அலுவலகத்தை காங்கிரஸ் கட்சியினர் முற்றுகையிட முயன்றனர்.
இதனால் ஆத்திரமடைந்த பாஜகவினர் முற்றுகையிட முயன்றவர்கள் மீது கற்களைக் கொண்டும், தடிகளை கொண்டும் பயங்கரமாக ஆபாசமான வார்த்தைகளால் திட்டி தீர்த்தனர்.
தாக்கவும் செய்தனர், இதனால் இரு தரப்பினருக்கும் மோதல் ஏற்பட்டது.
இதில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஐந்துக்கும் மேற்பட்டவர்களுக்கு பலத்த காயம் ஏற்பட்டது.
மேலும் பாஜகவினர் காங்கிரஸ் கட்சி கொடியையும் தீயிட்டு கொளுத்தினர்.
இச்சம்பவத்தால் அந்த பகுதியே போர்க்களம் போல் காட்சி அளித்தது.
அதுமட்டுமில்லாமல் பாஜகவினர் சட்டமன்ற உறுப்பினர் எம். ஆர்.காந்தி தலைமையில் சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தினர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஏ.டி.எஸ்.பி மற்று ம்போலிசார் சாலையில் அமர்ந்திருந்து போராட்டம் நடத்திய நாகர்கோவில் சட்டமன்ற உறுப்பினர் எம் ஆர் காந்தியிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
அப்பொழுது போலீசாரிடம் பாஜகவினர் வாக்குவாதம் செய்தது மட்டுமல்லாமல் உயர் காவல் அதிகாரிகளை ஆபாசமான வார்த்தையினால் திட்டி காவல்துறையை களங்கப்படுத்தி விரட்டியடிக்க முற்பட்டனர்.
இவற்றையெல்லாம் பார்த்த பொதுமக்கள் முகம் சுளித்தனர்.