இழுத்துச் செல்லப்பட்ட போராட்டக்காரர்கள்!

இழுத்துச் செல்லப்பட்ட போராட்டக்காரர்கள்!

 கே.ஏ.ஜெகதீஸ்வரி,

 ராஜபாளையத்தில் சேதமடைந்துள்ள சாலையை சீரமைக்க வலியுறுத்தி நடைபெற இருந்த உண்ணா விரத போராட்டத்திற்கு காவல் துறையினர் அனுமதி மறுத்தனர். இதனை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல் துறையினர் வலுக்கட்டாயமாக கைது செய்தனர்.

 விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் மதுரை சாலையில் உள்ள நேரு சிலையில் இருந்து, தென்காசி சாலையில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகம் வரை பல்வேறு இடங்களில் சாலை குண்டும் குழியுமாக உள்ளது. இந்த சாலையை சீரமைக்க தேசிய நெடுஞ்சாலை துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் குற்றம் சாட்டிஅரசைக் கண்டித்து சமூக ஆர்வலர்கள் கூட்டமைப்பு சார்பில் இன்று உண்ணாவிரத போராட்டம் நடைபெற இருந்தது.

 ஆனால் இந்த போராட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுத்தனர். உண்ணாவிரத பந்தல் அமைக்க வந்தவர்களையும் காவல் துறையினர் திருப்பி அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் சுமார் 10 மணி அளவில் ஜவஹர் மைதானம் எதிரே போராட்டத்தில் ஈடுபட வந்தவர்களை காவல் துறையினர் கலைந்து செல்ல அறிவுத்தினர்.

   இதனால் ஆத்திரமடைந்த போராட்டக்குழுவினர், அனுமதி வழங்காத காவல் துறையினரை கண்டித்தும், தமிழக அரசை கண்டித்தும் முழக்கமிட்டவாறு சாலையில் அமர்ந்து 20- க்கும் மேற்பட்ட சமூக ஆர்வலர்கள் போராட்டம் நடத்தினர். இவர்களை கைது செய்ய முயன்ற போது, மறுப்பு தெரிவித்ததால் காவல் துறையினர் வலுக்கட்டாயமாக கைது செய்து போது விவசாயி ஒருவர் சாலையில் உருண்டதால் பரபரப்பு காணப்பட்டது அவரே அழைத்துக் கொண்டு தனியார் திருமண மண்டபத்திற்கு அழைத்து சென்று பின்னர் விடுவித்தனர்.