மேஜைகளை உடைத்த அரசு பள்ளி மாணவர்கள் சஸ்பெண்டு! சலூன் கடைக்காரர்களுக்கு ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் எச்சரிக்கை!

 ஜி.கே.சேகரன்,

 அரசு பள்ளியில் மேஜைகளை உடைத்த மாணவர்கள் 10 நாட்கள் பள்ளிலிருந்து இடைநீக்கம் செய்யபடுகின்றனர் - மேஜைகளை மாணவர்களின் பெற்றோர்கள் பள்ளிக்கு வாங்கி தரவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது - இனி வரும் காலங்களில் மாணவர்கள் இது போன்ற செயல்களில் ஈடுபட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்- மாணவர்கள் விவகாரத்தில் அரசியல்வாதிகள் தலையிட கூடாது  மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் மேஜைகளை உடைத்த மாணவர்களுக்கு அறிவுரை வழங்கி பின்பு பேட்டி!                        வேலூர் மாவட்டம், தொரப்பாடி அரசினர் மேல்நிலைப்பள்ளியில் மாணவர்கள் சிலர் மேஜைகளை உடைத்தனர், இந்த வீடியோவானது சமூக வளைதலமான வாட்ஸ் ஆப் ,மூலம் வேகமாக பரவியது.

 இதனை அடுத்து பள்ளியில் முதன்மை கல்வி அலுவலர் முனுசாமி,வருவாய் கோட்டாச்சியர் பூங்கொடி ஆகியோர் மாணவர்களிடம் விசாரணை நடத்தினர். பின்னர் பெற்றோர்களையும், சம்மந்தப்பட்ட 10 மாணவர்களையும் மாவட்ட ஆட்சியர் பெ.குமாரவேல் பாண்டியன்,இ.ஆ.ப. தலைமையில் நடந்த கூட்டத்தில் கலந்துகொள்ளச் செய்தனர்.

 அதில் அரசு பள்ளியில் அனைத்து இலவசம் கொடுத்து கல்வியை இலவசமாக அளிக்கும் போது இது போன்ற செயல்களில் மாணவர்கள் ஈடுபட கூடாது என அறிவுரை கூறினார். 

 பின்னர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் செய்தியாளர்களிடம் கூறுகையில் நேற்று முன் தினம் தொரப்பாடி அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவர்கள் மேஜைகள் நாற்காலிகளை உடைத்து அந்த வீடியோவை சமூக வளைதலங்களில் பதிவேற்றினார்கள் இதனால் பள்ளிக்கு முதன்மை கல்வி அலுவலரை அனுப்பி விசாரணை செய்தோம்.

  இன்று மாணவர்களை இங்கு அழைத்து மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் அறிவுரையை வழங்கினோம்.

 மாணவர்கள் அரசு வழங்கும் கல்விக்கு நற்பெயரை ஏற்படுத்த வேண்டும் இனிவரும் காலங்களில் பள்ளிகளில் இது போன்ற சம்பவங்கள் ஏற்பட  கூடாது அவ்வாறு ஈடுபட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கபடும்.

  மேலும் மேஜைகள் நாற்காலிகள் சேதப்படுத்தியதை ஏற்க முடியாது, அவர்களிடம் இதனை பெற நடவடிக்கை எடுத்துள்ளோம் இன்று முதல் மே ஐந்தாம் தேதி வரையில் மேஜையை உடைத்த மாணவர்கள் சஸ்பெண்ட் செய்யப்படுவார்கள்.

 பெற்றோர்களிடம் மேஜைகளை வாங்கி கொடுக்க வேண்டுமென கூறியுள்ளோம்.

 அவர்களிடமிருந்து மேஜைகளை பள்ளிக்கு வாங்கவும் நடவடிக்கை எடுத்துள்ளோம்.

 பள்ளியின் தலைமை ஆசிரியர் மாற்றுத்திறனாளி என்பதால் அவர் மாணவர்களை கண்காணிக்க முடியவில்லை, சலூன் கடைகளுக்கும் மாணவர்களுக்கு ஒழுங்காக முடிதிருத்த வேண்டுமென அறிவுரையை வழங்க உள்ளோம்.

 அரசியல் கட்சிகள் சில மாணவர்கள் பள்ளிகளில் ஒழுங்கீனமாக நடந்து கொண்டால் பள்ளிக்கு வந்து கட்டப்பஞ்சாயது செய்யகூடாது அதனை தடுக்க நடவடிக்கை எடுக்கபடும், இது போன்ற மாணவர்களின் சம்பவங்களுக்கு காவல்துறையுடன் கலந்துபேசி முற்றுப்புள்ளி வைக்கபடும்.

  மே மாதத்திற்குள்ளாக பள்ளி மேலாண்மை குழு அமைக்கபடும் பள்ளியின் நிர்வாகத்தில் உறுப்பினர்களாக பெற்றோர்களிடம் இருக்கும் இது ஆக்கப்பூர்வமாக அமையும் மாணவர்களின் எதிர்காலம் நல்ல முறையில் இருக்கும் வாரத்தில் ஒன்று அல்லது இருமுறை ஒழுக்க நெறி வகுப்புகள் பள்ளிகள் நடத்தபடும்.

 மேலும் அதனை நடத்த ஏற்பாடுகள் செய்யபடும் மாணவர்கள் பள்ளியின் ஒழுக்க கேடாக செயல்படுவதால் சிறுவர்கள் என்பதால் தப்பிப்பார்கள் ஆனால் 18 வயதிற்கு மேல் இதே செயலை செய்தால் அவர்கள் குண்டர் சட்டத்தில் கைதாகி சமூக விரோதிகளாவார்கள் இது போன்ற நிலைக்கு மாணவர்கள் செல்ல கூடாது என்று கூறினார்.