காங்கிரஸை கழற்றிவிட்ட மம்தா பானர்ஜி! பயனடையப் போகும் பாஜக!

உ.சசிகுமார்,
இந்தியா கூட்டணியுடன் பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டிருந்த மேற்கு வங்க முத்யல்வர் மம்தா பானர்ஜி மாநிலத்தில் உள்ள 42 மக்களவை தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்து காங்கிரஸிக்கு அதிர்ச்சி கொடுத்திருக்கிறார். இதனால் 'இந்தியா' கூட்டணிக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
விரைவில் மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது. இத்தேர்தலில்ஆளும் பாஜகவை தோற்கடிப்பதற்காக, காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ், ஆம் ஆத்மி, திமுக, சமாஜ்வாதி, ராஷ்ட்ரிய ஜனதா தளம், இடதுசாரிகள் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இணைந்து 'இந்தியா' என்ற பெயரில் புதிய கூட்டணியை அமைத்துள்ளன.
ஆனாலும், கேரளா உள்ளிட்ட சில மாநிலங்களில் இக்கூட்டணியில் உள்ள கட்சிகள் தனித்து போட்டியிட முடிவு செய்துள்ளன.
ஆனாலும், மேற்கு வங்கத்தில் தொகுதி பங்கீடு தொடர்பாக திரிணமூல் காங்கிரஸுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாக காங்கிரஸ் கட்சி சில நாட்களுக்கு முன்பு கூறியது.
இருப்பினும் மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் திரிணமூல் காங்கிரஸ் சார்பில் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில், மாநிலத்தில் மொத்தம் உள்ள 42 மக்களவை தொகுதிகளுக்கும் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதன்மூலம் மேற்கு வங்கத்தில் இநிதியாகூட்டணி இல்லை என்பது தெளிவுபடுத்தியுள்ளார் மம்தா.
பஹராம்பூர் தொகுதி காங்கிரஸ் மூத்த தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரியின் கோட்டையாக கருதப்படுகிறது. இவர் கடந்த 1999 முதல் இத்தொகுதி எம்.பி.யாக உள்ளார். இவருக்கு எதிராக யூசுப் பதானை களமிறக்கி உள்ளார் மம்தா. இந்த தொகுதியை காங்கிரஸுக்கு விட்டுக்கொடுக்க திரிணமூல் மறுப்பு தெரிவித்ததாம், அதே போல் மொத்தம் உள்ள 42- தொகுதிகளில் 3 தொகுதிகளுக்கு மேல் வேண்டும் என்று காங்கிரஸ் கேட்டது. ஆனால், 2 தொகுதிக்கு மேல் வழங்க திரிணமூல் மறுப்பு தெரிவித்துவிட்டது. அது காங்கிரஸின் கவுரவத்திற்கு சரியாக வராது என்பதினால் சற்று யோசித்தனர். இந்த இடைபட்ட கேப்பில் மம்தா வேட்பாளர் பட்டியலை அறிவித்துவிட்டார்.
இது இந்தியா கூட்டணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் சூழலை உண்டாக்கியிருக்கிறது. ஆனால் நாங்கள் இந்தியா கூட்டணிக்கு ஆதரவு தெரிவிப்போம் என்று மம்தா கூறியிருக்கிறார்.
என்னதான் இருந்தாலும் காங்கிரசும், திரிணாமுலும் தனித்தனியே போட்டியிட்டால் பாஜகவுக்கே லாபம் என்பது தான் யதார்த்தம்.