தலைமையை அவமானப்படுத்தும் குலாம் நபி ஆசாத்! கையை பிசையும் காங்கிரஸ்!!

தலைமையை அவமானப்படுத்தும் குலாம் நபி ஆசாத்! கையை பிசையும் காங்கிரஸ்!!

 ஜார்ஜ்.ரவி,

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களின் ஒருவரான குலாம் நபி ஆசாத்துக்கு அக்கட்சியின் தலைமை முக்கிய பதவியை வழங்கியது. ஆனால் அதை சில மணித்துளிகளில் அவர் தூக்கி எறிந்தார்.

    ஜம்மு - காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர், மத்திய அமைச்சர், இந்திய காங்கிரஸ் கட்சியின் அரசிய விவகாரக் குழு உறுப்பினர் உள்ளிட்ட பல்வேறு முக்கிய பொறுப்புகளை வகித்தவர் குலாம் நபி ஆசாத்.

  பின்னர் யூனியன் பிரதேசமாக மாற்றப்பட்ட பிறகு அங்கு சட்டமன்ற தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் தீவிரமாக பணி செய்து வருகிறது. அதே நேரத்தில் அரசியல் கட்சிகளும் தங்களது கட்சியின் பலத்தை அதிகரிக்கும் வகையில் பல்வேறு யூகங்களை கையாண்டு வருகின்றன.

 அதில், காங்கிரஸ் கட்சியில் குலாம் நபி ஆசாத்துக்கு மிக நெருக்கமான விஹார் ரசூல் ஜம்மு-காஷ்மீரின் புதிய காங்கிரஸ் தலைவராக நியமித்துள்ளார்.

  அதே நேரத்தில் குலாம் நபி ஆசாத்தை பிரசாரக் குழு தலைவராக நியமிக்கப்பட்டார்.

 இதனால் வெறுப்படைந்த ஆசாத் கட்சி அறிவித்த பதவியை சில மணிநேரத்தில்  விலகுவதாக அறிவித்துள்ளார். இது காங்கிரஸ் தலைவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

  கட்சி தலைமையில் மாற்றங்களை கொண்டுவர வேண்டும் என்று கடிதம் எழுதிய 23 பேரில் குலாம் நபி ஆசாத்தும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.