மு.க.ஸ்டாலின்... சந்திரபாபு நாயுடு டெல்லியில் சந்தித்து என்ன பேசினார்கள்!
Naresh.N.
டெல்லி சென்றுள்ள தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களும் ஆந்திராவில் முதலமைச்சராக பதவி ஏற்க உள்ள சந்திரபாபு நாயுடு அவர்களும் சந்தித்து பேசிக்கொண்டனர்.
பெரிதும் எதிர்பார்க்கும் சந்திரபாபுநாயுடு மற்றும் நிதீஷ்குமார் ஆகியோர் தங்கள் ஆதரவு கடிதத்தை NDA கூட்டணிக்கு அளித்து விட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ள நிலையில், மேற்படி இருவரின் சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
டெல்லி விமான நிலையத்தில் இவர்கள் சந்தித்து சிறிது நேரம் பேசிக் கண்ட போது, இந்தியா கூட்டணிக்கு சந்திரபாபு நாயுடுவை சூசகமாக அழைத்தார் ஸ்டாலின் என்று கூறப்படுகிறது.
இருப்பினும் இரு தரப்பில் இருந்தும் எந்த தகவலையும் வெளியிடவில்லை.ஆகவே பல்வேறு யூகங்கள் இறக்கை கட்டி பறந்து வருகின்றன.