மீண்டும் இந்திய கம்யூனிஸ்ட் வசமான நாகப்பட்டினம் தொகுதி! ஊர்வலம் சென்ற மயிலாடுதுறை எம்.பி!

மீண்டும் இந்திய கம்யூனிஸ்ட் வசமான நாகப்பட்டினம் தொகுதி! ஊர்வலம் சென்ற மயிலாடுதுறை எம்.பி!

க.பாலகுரு,

2,08957 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வை.செல்வராஜ் வெற்றி பெற்றார்.

  நாகப்பட்டினம் மக்களவை தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் வை.செல்வராஜ் 2.08 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றறார்.

 நாகை, கீழ்வேளூர், வேதாரண்யம், திருவாரூர், திருத்துறைறப்பூண்டி, நன்னிலம் ஆகிய 6 சட்டப்பேரவை தொகுதிகளை உள்ளடக்கிய நாகை மக்களவைத் தொகுதியில், 847 இடங்களில் அமைக்கப்பட்டிருந்த 1551 வாக்கு மையங்களில், 9,68,049 வாக்காளர்கள் தங்களது வாக்குகளை பதிவு செய்தனர்.

 இந்நிலையில் நாகை செல்லூரில் உள்ள அரசுக் கலைக் கல்லூரியில் செவ்வாய்க்கிழமை காலை 8 மணிக்கு மாவட்டத் தேர்தல் நடத்தும் அலுவலர் ஜானி டாம் வர்கீஸ், தேர்தல் பொது பார்வையாளர் பி.பாரதி லக்பதி நாயக் ஆகியோர் முன்னிலையில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.

712 ஊழியர்கள்

வாக்கு எண்ணும் மையத்தில் நாகை 16, கீழ்வேளூர் 15, வேதாரண்யம் 17, திருத்துறைறப்பூண்டி 20, திருவாரூர் 22, நன்னிலம் 23 சுற்றுகளாக வாக்குகள் எண்ணப்பட்டன. முன்னதாக காலை 8 மணிக்கு, தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. இதற்காக 6 மேஜைகள் தனியாக அமைக்கப்பட்டிருந்தது. வாக்கு எண்ணும் பணியில் 712 ஊழியர்கள் ஈடுபட்டிருந்தனர். வாக்கு எண்ணும் மையத்தில் 700 போலீஸலர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

ஆதிக்கம் செலுத்திய சிபிஐ

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் வை.செல்வராஜ் முதல் சுற்றிலிருந்தே முன்னிலை வகித்தார். ஒவ்வொரு சுற்றிலும் அடுத்த வந்த அதிமுக வேட்பாளர் சுர்சித் சங்கரை 10 ஆயிரம் வாக்குகளுக்கு அதிகமாக வை.செல்வராஜ். தொடக்கம் முதலே மூன்றறாவது இடத்தை நாம் தமிழர் கட்சி வேட்பாளர் எம்.கார்த்திகா தக்கவைத்து கொண்டார். பாஜக வேட்பாளர் ரமேஷ் கோவிந்த் நான்காம் இடத்தில் தொடர்ந்து நீடித்தார்.

2.08 லட்சம் வாக்குகள் அதிகம்

நாகை மக்களவை தொகுதி வாக்கு எண்ணிக்கை 23 சுற்றுகள் நடைபெற்றறன. இதில் திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் வை.செல்வராஜ், 2, 08,957 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றறார். அவர் வெற்றி பெற்றறதற்கான சான்றிதழை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் ஜானி டாம் வர்கீஸ், பொது தேர்தல் பார்வையாளர் பி.பாரதி லக்பதி நாயக் ஆகியோர் வழங்கினர். திமுக மாவட்டச் செயலர்கள் பூண்டி கே.கலைவாணன் (திருவாரூர்), என்.கௌதமன் (நாகை), கீழ்வேளூர் சட்டப்பேரவை உறுப்பினர் நாகை வி.மாலி உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

நாகை மக்களவை தொகுதி வாக்குகள் விவரம்

மொத்த வாக்காளர்கள் :13,45,120

 

பதிவான வாக்குகள்: 9,68,049

பதிவான தபால் வாக்குகள்: 5,724

 

செல்லாத தபால் வாக்குகள்: 762

வேட்பாளர்கள் பெற்றற வாக்குகள் விவரம்

 

  1. செல்வராஜ் (இந்திய கம்யூ.) } 4,65,044

 

  1. சுர்ஜித் சங்கர் (அதிமுக) } 2,56,087

 

  1. கார்த்திகா (நாம் தமிழர்) } 1,31,294

 

  1. ரமேஷ்கோவிந்த் (பாஜக) } 1,02,173

 

  1. நோட்டா }8,918

மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் வழக்கறிஞர்  சுதா 5,18,459 வாக்குகள் பெற்று 2,71,183 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி. அமைச்சர் உள்ளிட்டோருடன் பேரணியாக சென்று அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

 மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதி மொத்தம் 15,45,568 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் அஞ்சல் வாக்குகளையும் சேர்த்து 10,88,182 பேர் வாக்களித்தனர். இத்தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் சுதா 5,18,459 வாக்குகள் பெற்று 2,71,183 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அதிமுக வேட்பாளர் பாபு 2,47,276 வாக்குகள், பாமக வேட்பாளர் ம.க.ஸ்டாலின் 1,66,271 வாக்குகள், நாம் தமிழர் வேட்பாளர் காளியம்மாள் 1,27,642 வாக்குகள் பெற்று, அடுத்தடுத்த இடத்தை பிடித்தனர்.

  8,695 வாக்குகள் நோட்டாவில் பதிவாகின. வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே முன்னணியில் இருந்த காங்கிரஸ் வேட்பாளர் சுதா 2,71,183 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அவருக்கு, தேர்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான ஏ.பி.மகாபாரதி, தேர்தல் பொது பார்வையாளர் கன்ஹீராஜ் ஹச் பகதே முன்னிலையில் வெற்றி பெற்றதற்கான சான்றிதழை வழங்கினார். அப்போது, அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன், எம்.எல்.ஏக்கள் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா எம்.முருகன், மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ராஜகுமார், எம்பி ராமலிங்கம், கல்யாணசுந்தரம் எம் பி, தமிழக அரசின் தலைமை கொறடா கோவி.செழியன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

 இதனை தொடர்ந்து, வெற்றி பெற்ற காங்கிரஸ் வேட்பாளர் சுதா, அமைச்சர் உள்ளிட்ட திமுக மற்றும் இந்தியா கூட்டணி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுடன் வாகனங்களில் பேரணியாக சென்று மயிலாடுதுறை பேருந்து நிலையம் முன்பு அமைந்துள்ள அண்ணா சிலைக்கு மாலை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.