தூக்கிகொண்டு போகிறார்கள் அல்லது விட்டுச்செல்கிறார்கள்! அடேங்கப்பா ஆஸ்பத்திரி!

கு.அசோக்,
வேலூர் அரசு மருத்துவமனைகளை பொறுத்தவரை ஒன்று குழந்தையை தூக்கிக்கொண்டு போய்விடுகிறார்கள் அல்லது விட்டுச்செல்கிறார்கள். இந்நிலையில் தற்போது பிறந்து ஐந்து நாட்களே ஆன ஆண் குழந்தையை விட்டு சென்றது பெரும் பரப்பரப்பு ஏற்படுத்தியது.
வேலூர் அரசு பென்ட்லெண்ட் மருத்துவமனையில் உள்ள புறநோயாளிகள் பிரிவில் நேற்று மாலை 3 மணி அளவில் தன் குழந்தையுடன் மருத்துவமனைக்கு சிகிச்சை பெறுவது போல் வந்து அங்கே இருந்த நபர்களிடம் பேசிக்கொண்டே தனது குழந்தையை உறங்க வைத்து அங்கே இருந்த மேஜையின் மேல் குழந்தையை வைத்துவிட்டு சென்றார்.
சில மணி நேரம் கழித்து உறங்கிய குழந்தை அழுகும் பொழுது தான் அந்தக் குழந்தை யார் என விசாரணை செய்தனா. ¢அப்பொழுது அடையாளம் தெரியாத ஒரு பெண்மணி வந்ததாகவும் அவர் வேலூர் விருதம்பட்டு பகுதியில் வசித்து வருவதாகவும் தனக்கு அடுக்கம்பாறையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் குழந்தை பிறந்து ஐந்து நாள் ஆனது, தன் குழந்தைக்கு மஞ்சா காமாலை அதற்கு சிகிச்சை பெறுவதற்காக வந்ததாக அங்கு இருக்கும் நபர்களிடம் கூறியுள்ளார்.
விட்டுச் சென்ற குழந்தையைப் பற்றி அக்கம் பக்கம் அனைவரிடமும் விசாரித்தும் எந்த ஒரு தகவலும் கிடைக்காததால், 108 ஆம்புலன்ஸ் மூலம் வேலூர் அடுக்கம்பாறையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் குழந்தைகள் நலப்பிரிவில் பாதுகாப்பாக வைத்திருப்பதாக தெரிவித்தனர்.
அந்த அடையாளம் தெரியாத பெண்மணி கூறியதை வைத்து அடுக்கம்பாறையில் உள்ள அரசு மருத்துவமனையில் செவிலியர்கள் விசாரித்த உள்ளனர் அப்பொழுது அங்கிருக்கும் மருத்துவர்கள் அது போன்று குழந்தைகள் இங்கு எதுவும் பிறக்கவில்லை பிறந்த குழந்தைகள் அனைத்தும் பத்திரமாக பாதுகாப்புடன் உள்ளது என கூறியதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
அந்த அடையாளம் தெரியாத பெண் கூறியது அனைத்தும் பொய்யாக இருக்கலாம் என கூறப்படுகின்றன.
இது குறித்து வேலூர் தெற்கு காவல் நிலத்தில் புகார் அளித்ததின் பெயரில் தெற்கு காவல் நிலைய போலீசார், அந்த அடையாளம் தெரியாத பெண்மணி யார் என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். எப்படியும் பிடிச்சுடுவாங்க என்று நம்பலாம்.