உங்களை தேடி...கலெக்டர் ஆய்வு!

உங்களை தேடி...கலெக்டர் ஆய்வு!

 ஜி.கே.சேகரன்,

  குடியாத்தம் மற்றும் பேர்ணாம்பட்டு பகுதிகளில் மாவட்ட ஆட்சியர் சுப்புலெட்சுமி உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டத்தில் ஆய்வுகளை மேற்கொண்டார்.

 வேலூர்மாவட்டம், குடியாத்தம் வட்டத்திற்குட்பட்ட அரசு உயர்நிலைப்பள்ளியில் மாவட்ட ஆட்சியர் சுப்பு லெட்சுமி ஆய்வு செய்தார்.  அப்போது அவர் அங்கு மரக்கன்றுகள் நட்டுவைத்தார்.

  பின்னர்   வகுப்பறைக்கு சென்று மாணவர்களிடம் ஆசிரியர்கள் வகுப்புகளை சாரியாக நடத்துகின்றனரா என கேட்டறிந்தும் ஆய்வு செய்தார்.

பின்பு கூடநகரத்தில் கலைஞர் கணவு வீடு கட்டுமான பணியையும் ஆட்சியர் ஆய்வு செய்தார்,  இந்த ஆய்வின் போது குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் அமுலு, முதன்மை கல்வி அலுவலர் மணிமொழி மற்றும் அரசு அதிகாரிகள் இருந்தனர்