அடேங்கப்பா காளைகள்!களைகட்டிய இராணிப்பேட்டை - திருப்பத்தூர் மாவட்டங்கள்!

கு.அசோக்,
மாங்க்குப்பம் கிராமத்தில் கலை கட்டிய எருது விடும் திருவிழா - பல்வேறு மாவட்டங்களில் இருந்து பங்கேற்று மின்னல் வேகத்தில் சீறிப்பாய்ந்த காளைகளை கண்டு பொது மக்கள் இளைஞர்கள் மகிழ்ந்தனர்.
இராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு அருகே உள்ள மாங்குப்பம் கிராமத்தில் ஸ்ரீ பொன்னியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு இன்று 46 ஆவது எருதுவிடும் விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.
இந்த எருது விடும் திருவிழாவில் சிறப்பு அழைப்பாளராக கலந்துக் கொண்ட மாநில கைத்தறி மற்றும் துணி நூல் அமைச்சர் காந்தி, மாவட்ட ஆட்சியர் சந்திரகலா ஆகியோர் முன்னிலையில் எருதுவிடும் குழுவினர் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
பின்னர் போட்டியினை அமைச்சர் காந்தி தொடங்கி வைத்தார்.
இந்த எருதுவிடும் போட்டியில் வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, ஆந்திரா ஆகிய மாநில, மாவட்டங்களில் இருந்து 500 க்கு மேற்பட்ட காளைகள் கலந்து கொண்டது.
தொடர்ந்து போட்டியில் பங்கேற்ற அனைத்து காளைகளுக்கும் கால்நடைத்துறை மருத்துவரால் பரிசோதனை செய்யப்பட்டு காளைகள் போட்டியில் அனுமதிக்கப்பட்டது.
இந்த போட்டியில் குறைந்த வினாடிகளில் சீரிப் பாய்ந்து இலக்கை அடைந்த காளைகளுக்கு முதல் பரிசாக ஒரு லட்சம் ஐம்பதாயிரம் ரூபாயும், இரண்டாம் பரிசாக 75 ஆயிரமும், மூன்றாம் பரிசாக 60 ஆயிரம் உட்பட 16 வகையான பரிசு பொருட்கள் வழங்கப்பட்டது.
மேலும் எருது விடும் விழாவில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விவேகானந்தா சுக்லா தலைமையிலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
திருப்பத்தூர் மாவட்டம்
வாணியம்பாடி அருகே மயிலை திருவிழாவை முன்னிட்டு மாபெரும் எருது விடும் திருவிழா நடைபெற்றது
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த நிம்மியம்பட்டு கிராமத்தில் மயிலை திருவிழாவில் 159 ஆவது எருது விடும் திருவிழா வெகு சிறப்பாக நடைபெற்றது.
இந்த திருவிழாவில் சுமார் 200 க்கு மேற்பட்ட காளைகள் கலந்து கொண்டன இதில் வாணியம்பாடி ஆம்பூர் கிருஷ்ணகிரி தர்மபுரி ஆகிய பல்வேறு மாவட்டங்களில் இருந்து காளைகள் கலந்து கொண்டு சிறப்பாக ஓடியது. எருது விடும் திருவிழாவில் திரளான இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். இதில் 200 க்கும் மேற்பட்ட காளைகள் கலந்து கொண்டன.
இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை விழா கமிட்டினர் செய்தனர் பாதுகாப்பு பணியில் காவல்துறையினர் ஈடுபட்டனர் இதில் மட்டும் 41 பரிசுகள் வழங்கப்பட்டது.