உள்ளாட்சி தேர்தல்:- தட்டி தூக்கிய திரிணாமுல் காங்கிரஸ்! பிரித்தாளும் சூழ்ச்சி செய்ததாக பாஜகமீது குற்றச்சாட்டு!

ம.பா.கெஜராஜ்
பெரிய வன்முறை சம்பவங்களுக்கு மத்தியில் உயிர் பலி வாங்கியமேற்கு வங்காள மாநிலத்தில் கடந்த 8-ந்தேதி சனிக்கிழமை உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. மொத்தம் 63,229 கிராம பஞ்சாயத்து இடங்களுக்கு தேர்தல் நடைபெற்றது. வாக்கு பதிவன்று 80.71 சதவீத ஓட்டுகள் பதிவானது. வன்முறை சம்பவங்களால் பாதிக்கப்பட்ட 19 மாவட்டங்களுக்கு உள்ளிட்ட 696 வாக்குச்சாவடிகளில் நேற்று பலத்த பாதுகாப்புடன் மறுவாக்குப்பதிவு நடந்தது. சில இடங்களில் இந்த மறுவாக்குப்பதிவுக்கு எதிர்ப்பு கிளம்பிய போதிலும் 69.85 சதவீதம் ஓட்டுகள் பதிவானது.
இந்த தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் பாரதிய ஜனதா, காங்கிரஸ் மற்றும் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சிகள் இடையே கடுமையான போட்டி நிலவியது. தேர்தலில் பதிவான வாக்குகள் பலத்த பாதுகாப்புடன் இன்று எண்ணப்பட்டன.
ஓட்டு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்து முதலமைச்சர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சி அதிக இடங்களில் முன்னிலை பெற்றது.
அட்டவணையில் விவரம் உள்ளது.
புதிதாக ஆரம்பிக்கப்பட்ட இந்திய மதச்சார்பற்ற முன்னணி 1000 இடங்களுக்கு மேல் வெற்றி பெற்றிருந்தது. திரிணாமுல் காங்கிரஸ் அதிருப்தி வேட்பாளர்கள் உள்ளிட்ட சுயேட்சைகள் 418 இடங்களில் வெற்றி பெற்றுள்ளனர்.
மேற்படி தேர்தல் முடிவுகளால் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் உற்சாகத்தில் உள்ளனர். வெற்றியை கொண்டாடி வருகின்றனர். இந்த வெற்றியானது, திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் மாநில அரசு மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை காட்டுவதாகவும், பாஜகவின் பிரித்தாளும் அரசியலையும், காங்கிரஸ் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எதிர்மறை அரசியலையும் மக்கள் நிராகரித்ததை காட்டுவதாகவும் திரிணாமுல் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் குணால் கோஷ் தெரிவித்தார்.
வாக்கு எண்ணிக்கை இன்னும் நிறைவடையவில்லை.