கால்நடைத்துறையில் போலி செயலி:- ஆட்சியர் எச்சரிக்கை!

G.K.SEKARAN,
வேலூர்மாவட்டத்தில் கொரோனா தடுப்பு குறித்து முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் அனைத்தும் மேற்கொள்ளப்பட்டுள்ளது அனுமதியின்றி ரங்கராட்டினம் நடத்தியவர்கள் மீது வழக்குபதிவு செய்ய மாவட்ட நிர்வாகம் உத்தரவு- மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் பேட்டி.
வேலூர் மாவட்டம், அமிர்தி அருகேயுள்ள நாகநிதி கிராமத்தில் தமிழக அரசின் ஒருங்கிணைந்த வேளாண்மை திட்டத்தின் கீழ் கால்நடைகளுக்கான மருத்துவ முகாமும் விவசாயிகளுக்கு இடு பொருட்கள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மாவட்ட ஆட்சியர் பெ.குமாரவேல் பாண்டியன் இ.ஆ.ப. தலைமையில் நடைபெற்றது.
இதில் கால்நடைத்துறை உதவி இயக்குநர் அந்துவன் வேளாண்மைதுறை உதவி இயக்குநர் மகேந்திரகுமார் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இதில் ஊராட்சித்தலைவர் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் ஒன்றிய குழுதலைவர் திவ்யா ,உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர் இதில் விவசாயிகளுக்கு இடு பொருட்களை வழங்கி கால்நடைகள் குடற்புழு நீக்கம் சத்துமாத்திரைகள் தடுப்பூசிகள் போடுதல் போன்றவைகள் நடந்தது.
பின்னர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் செய்தியாளர்களிடம் கூறுகையில் இந்த ஆண்டு ஒருங்கிணைந்த வேளாண் திட்டத்தில் 52 கிராமங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
இதனை செயல்படுத்த வேண்டும் அதற்கு நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம் 52 இடங்களில் முகாம் நடக்கிறது கால்நடைத்துறை என கூறி போலி செயலி மூலம் வேலைக்கு ஆட்கள் எடுப்பதாக வாட்ஸ் ஆப் மூலம் பரவுவதை நம்ப வேண்டாம்.
தமிழக அரசு தேர்வாணையத்துறை மூலம் அல்லது துறை தேர்வு மூலம் ஆட்களை எடுப்பார்கள் ஆகவே போலிகளை நம்ப வேண்டாம்.
பேர்ணாம்பட்டு பகுதியில் அனுமதியின்றி ரங்கராட்டினம் நடத்தியவர்கள் மீது வழக்குபதிவு செய்து நடவடிக்கை எடுத்துள்ளோம்.
இனி வரும் காலங்களில் இது போன்று நடத்த கூடாது.
கொரோனா தாக்கம் அதிகரித்துள்ளது இதற்காக அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் தயார் நிலையில் நேற்று வெளியூர் மற்றும் வெளி மாநிலத்தை சேர்ந்த 2 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது சோதனைகளும் அதிகரித்துள்ளோம் தயார் நிலையில் உள்ளோம் என்று சொன்னார்.