ஆயுத பூஜையில் ஆட்டோகாரர்களின் குத்தாட்டம்!

ஆயுத பூஜையில் ஆட்டோகாரர்களின் குத்தாட்டம்!

 பா.சுரேஷ்,

 நந்திவரம் கூடுவாஞ்சேரி அண்ணா பேருந்து நிலைய எம்.கே. தண்டபாணி ஆட்டோ ஓட்டுநர் நலச்சங்கம் சார்பில் ஆயுத பூஜை விழாவில் குழந்தைகள் குத்தாட்டம்.!

 செங்கல்பட்டு மாவட்டம், நந்திவரம் கூடுவாஞ்சேரி நகராட்சியில் அண்ணா பேருந்து நிலையம் எம்.கே. தண்டபாணி ஆட்டோ ஓட்டுனர் நலச்சங்கம் சார்பில் ஆயுத பூஜை விழா புதுப்பாளையத்தம்மன் கோயில் அருகில் நடைபெற்றது.

 நிகழ்ச்சிக்கு சங்கத் தலைவர் சி.கே. ராகேஷ் தலைமை தாங்கினார்.சங்க செயலாளர் எம்.அசாத் அனைவரையும் வரவேற்றார்.

 ஆட்டோ ஓட்டுனர் நலச்சங்க ஆயுத பூஜை விழாவில் சிறப்பு விருந்தினர்களாக நந்திவரம் கூடுவாஞ்சேரி நகர மன்ற தலைவர் எம்.கே.டி.கார்த்திக், நந்திவரம் கூடுவாஞ்சேரி நகர மன்ற துணை தலைவர் வக்கீல் ஜி.கே. லோகநாதன், ஊரப்பாக்கம் வி.பி. பிராப்பர்டிஸ் நிருவனர் லயன்.கார்த்திக், சமூக ஆர்வலர் கூடுவாஞ்சேரி தனசேகர் ஆகியோர் கலந்துகொண்டு ஆட்டோ ஓட்டுநர்களுக்கு நலத்திட்ட உதவிகளையும்  இனிப்புகளையும் வழங்கினர்.   

 நிகழ்ச்சியில் எம். கே.தண்டபாணி ஆட்டோ ஓட்டுனர் நல சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களான எல்.தீனதயாளன், என்.பாலு, ஆர். முனுசாமி, கே.கருப்புசாமி,  எம்.நிஷார், சி.சுரேஷ் ஜான், ஆர்.சக்திவேல், ஆர்.சங்கர், அழகேசன்,இமாம் ஆகியோர் கலந்துகொண்டு கொண்டனர். பூஜை முடிவில் சங்க பொருளாளர் ரோஸ் நன்றி சொன்னார்.