நேற்று ராத்திரி யம்மா பாடலால் மோதல்..தடியடி!

ஜி.கே.கேகரன்,
நாட்றம்பள்ளியில் திரைப்பட நடன நிகழ்ச்சி நடைபெற்று இருந்தபோது இரு கோஷ்டிகளிலேயே தகராறு ஏற்பட்டது.காவல்துறையினர் லேசான தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர் இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளியில் சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு ஸ்ரீ சாமுண்டீஸ்வரி அம்மன் கோவில் திருவிழா நேற்று நடைபெற்றது.அப்போது இரவு தேசிய நெடுஞ்சாலை ஒட்டி திரைப்பட நாட்டிய நடன நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தனர்.
அதில் சுற்றுள்ள கிராமத்தில் இருந்து ஆயிரக்கணக்கானோர் கண்டு ரசித்து வந்தனர்.
அப்போது நேற்று ராத்திரி யம்மா என்கிற பாடலுக்கு ஒரு சில இளைஞர்கள் நடனமாடி மகிழ்ந்து வந்தனர்.இந்தநிலையில் இரு கோஷ்டி இடையே தகராறு ஏற்பட்டு உள்ளது.
அப்போது காவல் பணியில் இருந்த சில போலீசார் லேசான தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர் இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.